» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தெலங்கானாவில் திருநங்கைகள் இருவர் அரசு மருத்துவர்களாக நியமனம்!
புதன் 30, நவம்பர் 2022 11:48:22 AM (IST)
தெலங்கானா மாநிலத்தில் இரு திருநங்கைகள் அரசு டாக்டர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பிராச்சி ராதோர் மற்றும் ருத் ஜான்பால் கொய்யலா ஆகிய இரு திருநங்கைகள், ஐதராபாத் உஸ்மானியா மருத்துவமனையில் அரசு டாக்டரகளாக கடந்த வாரம் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து கம்மம் பகுதியை சேர்ந்த டாக்டர். ருத் ஜான்பால் கொய்யலா கூறும்போது, "நான் கடந்த 2018-ல் ஹைதராபாத் மல்லா ரெட்டி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்தேன். ஆனால், திருநங்கை என்பதால், சுமார் 15-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் நடந்த பணிக்கான நேர்காணலில் திருப்பி அனுப்பப்பட்டேன். ஆனால், ஜெனரல் பிரிவில் நான் தற்போது அரசு டாக்டராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார்.
பிராச்சி ராதோர் கூறுகையில், "அடிலாபாத்தை சேர்ந்த நான், ரிம்ஸ் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தேன். அதன் பின்னர் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றினேன். நான் திருநங்கை என்பதால், அந்த மருத்துவமனைக்கு நோயாளிகள் வர தயங்குவார்கள் என்று கூறி, பணியிலிருந்து நீக்கிவிட்டனர்" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெல்லியில் குடியரசு தின விழா: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியேற்றினார்
வியாழன் 26, ஜனவரி 2023 11:44:24 AM (IST)

பிரதம் மோடி - எகிப்து அதிபர் பேச்சுவார்த்தை : இருநாடுகள் இடையே 5 ஒப்பந்தம் கையெழுத்து
வியாழன் 26, ஜனவரி 2023 10:49:14 AM (IST)

பணம், அதிகார பலத்தை உண்மை வீழ்த்திவிடும்: பாஜக மீது ராகுல் குற்றச்சாட்டு!
புதன் 25, ஜனவரி 2023 4:18:29 PM (IST)

குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக எகிப்து அதிபர் இந்தியா வருகை: உற்சாக வரவேற்பு
புதன் 25, ஜனவரி 2023 11:38:04 AM (IST)

பிபிசி ஆவணப் படத்தை திரையிட முயன்ற ஜேஎன்யு மாணவர்கள் .. கல்வீச்சு.. பரபரப்பு!!
புதன் 25, ஜனவரி 2023 10:37:57 AM (IST)

நாடாளுமன்றம்தான் உயர்ந்த அதிகாரம் கொண்டது: கொலிஜியம் விவகாரத்தில் மத்திய அமைச்சர் கருத்து!
புதன் 25, ஜனவரி 2023 10:31:24 AM (IST)
