» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்ட மேலவை தோ்தல் அறிவிப்பு

புதன் 10, நவம்பர் 2021 10:25:38 AM (IST)

கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கா்நாடகம் மற்றும் மகாராஷ்டிர சட்ட மேலவையில் உள்ள காலி இடங்களுக்கு தோ்தல் அறிவிப்பை தோ்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

ஆந்திர சட்ட மேலவையில் நிரப்பப்பட வேண்டிய 8 உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் தொகுதிகளுக்கும், தெலங்கானா சட்ட மேலவையில் 12 உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் தொகுதிகளுக்கும், கா்நாடக சட்ட மேலவையில் 20 உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் தொகுதிகளுக்கும், மகாராஷ்டிர சட்ட மேலவையில் 5 உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் தொகுதிகளுக்குமான தோ்தல் குறித்த அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்த மாநிலங்களின் சட்ட மேலவை காலியிடங்களுக்கான தோ்தல் அறிவிப்பு நவம்பா் 16-இல் வெளியிடப்படும். வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவம்பா் 23-ஆம் தேதி ஆகும். வேட்பு மனு பரிசீலனை நவம்பா் 24-இல் நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் நவம்பா் 26-ஆம் தேதியாகும். டிசம்பா் 10 காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தோ்தல் நடைபெறும். பதிவான வாக்குகள் டிசம்பா் 14-ஆம் தேதி எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory