» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பச்சரிசிக்கு பதிலாக புழுங்கல் அரிசி ஒதுக்கீடு : மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை

ஞாயிறு 31, அக்டோபர் 2021 10:04:52 AM (IST)

பச்சரிசிக்கு பதிலாக புழுங்கல் அரிசியை தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை புழுங்கல் அரிசியின் தேவை என்பது 80 சதவீதமாகவும், பச்சரிசியின் பயன்பாடு 20 சதவீதமாகவும் இருக்கிறது. இந்த 20 சதவீதத்தில் பெரும்பான்மையான பச்சரிசி பயன்பாடு தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளது.

தற்போது தமிழக அரசின் கிட்டங்கிகளில் பச்சரிசியின் இருப்பு அதிகமாக உள்ளது. இதை இந்திய உணவுக்கழக கிட்டங்கிக்கு அனுப்பவும், அதற்கு பதிலாக புழுங்கல் அரிசியை தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்து, அதை தேவையான பகுதிகளுக்கு பொதுவினியோக திட்டத்தின் கீழ் வழங்கவும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மத்திய பொதுவினியோகத்துறை மந்திரி பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் டெல்லியில் மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை இணைச்செயலாளர் சுபோத்குமார் சிங்கை சந்தித்து மேற்கண்ட கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory