» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நீட் தேர்வு நடந்தே தீரும் : தமிழக எம்.பி.க்களின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

வெள்ளி 23, ஜூலை 2021 5:23:20 PM (IST)

நீட் தேர்வு நடந்தே தீரும் என மக்களவையில் திமுக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் பதிலளித்துள்ளார்.

கரோனா 3வது அலை அச்சுறுத்தல் இருப்பினும் நீட் தேர்வு போன்ற நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்கும் திட்டம் இல்லை என மத்திய சுகாதார இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன், விழுப்புரம் எம்பி ரவிக்குமார் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு, அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

"நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு செப்டம்பர் 12-ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. கலை மற்றும் அறிவியல் படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்துவது பற்றி மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மான்டவியாவும் அண்மையில் ஆலோசித்து விரைவில் நீட் தேர்வு குறித்த முடிவுகள் வெளியாகும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory