» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பாடுபடுவோம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
சனி 4, பிப்ரவரி 2023 5:00:09 PM (IST)
இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற நானும், தொண்டர்களும் பாடுபடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அதற்கேற்ப இன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன் என்று கூறியிருந்தேன். அதேபோல், இன்று இரட்டை இலை சின்னத்தின் மூலம் அதிமுக போட்டியிடுகிற வாய்ப்பு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம்
பொது வேட்பாளரை நிறுத்த நான் கையெழுத்திட தயார் என்று அறிவித்தேன். என்னை ஒருங்கிணைப்பாளர் என்று மட்டும் அல்ல, கட்சியிலேயே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பகை உணர்வோடு கூறிவந்தனர்.
Also Read - உடுமலை நகராட்சி சந்தையில் நேற்று பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் கமிஷன் மண்டிகள் மற்றும் மொத்த விற்பனைக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் என்னையும் என்னை சார்ந்தவர்களையும் உள்ளடக்கி எங்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர்தான், பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எங்களை எதிர்த்தோருக்கு சரியான பாடமாக அமைந்துள்ளது.
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் என்கிற என்னுடைய பொறுப்பு நீடிப்பதற்கு எவ்வித தடையும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் விதிக்கப்படவில்லை. ஆனால், அதே நேரத்தில் சச்சரவுக்கு உள்ளான பொதுக்குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பொறுப்பில் நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி பொறுப்பை சுப்ரீம் கோர்ட்டும் , தேர்தல் ஆணையமும் அங்கீகரிக்கவில்லை.
இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரை இரட்டை இலை சின்னம் வெற்றி பெற நானும் என்மீது பற்றுக்கொண்ட தொண்டர்களும் மற்றும் என்மீது நம்பிக்கை கொண்ட பொதுமக்களும் பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக நிகழ்ச்சிகளில் பேனர், கட்-அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை
வியாழன் 16, மார்ச் 2023 5:31:40 PM (IST)

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
செவ்வாய் 14, மார்ச் 2023 10:26:59 AM (IST)

இந்தியா பற்றி சில ஊடகங்கள் பொய்களை பரப்புகின்றன : அனுராக் தாக்குர் கண்டனம்
சனி 11, மார்ச் 2023 10:04:47 AM (IST)

மசோதாவை ஆளுநர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
வியாழன் 9, மார்ச் 2023 12:03:06 PM (IST)

எடப்பாடி என்னும் நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை: ஓபிஎஸ் அறிக்கை
வெள்ளி 3, மார்ச் 2023 4:49:39 PM (IST)

நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு: பிரதமரிடம் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!
செவ்வாய் 28, பிப்ரவரி 2023 5:03:10 PM (IST)

PURATCHI THALAIVARFeb 5, 2023 - 02:47:22 PM | Posted IP 162.1*****