» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பிளஸ் டூ தேர்வில் நாசரேத் சாலமோன் பள்ளி சாதனை

புதன் 10, மே 2023 7:36:33 PM (IST)



பிளஸ் டூ தேர்வில்  நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை படைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், நாசரேத்தில் பிளஸ் டூ தேர்வில் சாலமோன்  மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பயின்ற எமினா ஷெர்லின் 600 க்கு 586 மதிப்பெண்களுடன் மூன்று பாடங்களில் 100% பெற்று முதல் இடத்தையும், பொன் செல்சியா 576 மதிப்பெண்களுடன் இரண்டு பாடங்களில் 100% மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், ஃபாத்திமா சுமையா 540 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார், 

இவர்களை பள்ளி தாளாளரும் நகர திமுக செயலாளருமான ஜமீன் சாலமோன், பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ், துணை முதல்வர் பியூலா ஜாய்ஸ் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பெற்றோர்களும் சாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர், மேலும் பள்ளி தாளாளர் சாதனை மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து விருது வழங்கி கௌரவித்தார், முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ஜோயல் ராஜ்குமார் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory