» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மூக்குப்பீறி பள்ளியில் உணவுத் திருவிழா

புதன் 22, மார்ச் 2023 4:44:00 PM (IST)



நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி பள்ளியில் உணவுத் திருவிழா நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூ.நா.தி.அ.க  தூய. மாற்கு தொடக்கப்பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் எண்ணும், எழுத்தும், கற்றலை  கொண்டாடுவோம் நிகழ்ச்சிகள் சேகர குருவானவர்  டேனியல் ஞானபிரகாசம்  தலைமையில் நடைபெற்றது.  சபை ஊழியர் எல்சின் வேத பாடம் வாசித்தார். மூக்குபீறி ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் ராஜேஸ்வரி,  சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன், ஆலய பரிபாலன கமிட்டி தலைவர் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

உதவி ஆசிரியர் சாலமோன் அனைவரையும் வரவேற்றார். எண்ணும் எழுத்தும் கற்றல் பற்றி  மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் ராஜன் விரிவாக பேசினார்.  பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களும் பல்வேறு வகையான பாரம்பரிய சத்தான உணவுகளை கொண்டு வந்திருந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சத்தான கீரை சூப் மற்றும் பயறு வகைகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியை கனகரதி பெப்பின்  நன்றி கூறினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory