» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டி: சேவியர் பாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டாமிடம்!

வெள்ளி 17, மார்ச் 2023 3:16:23 PM (IST)



நெல்லையில் நடைபெற்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் சேவியர் பாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டாமிடம் பெற்றனர். . 

திருநெல்வேலி FX பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற புதிய கண்டு பிடிப்புகளுக்கான புராஜக்ட் போட்டியில் செயின்ட் சேவியர் பாலிடெக்னிக், இயந்திரவியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சிதம்பரம், ஸ்ரீராம் செல்வா, நிர்மல் கணேஷ், ஷேக்னூர் முகமது ஆகியோர் தயாரித்த மோட்டார் பொருத்தப்பட்ட கிரேன் இரண்டாம் இடம் பிடித்தது, 

இதே போல் மற்றொரு பிரிவில் விக்னேஷ் ராம், ஜாய்ஸன், உதய சங்கர், மாடசாமி ஆகியோர் மல்டி ஸ்பின்ட்ல் எனும் இயந்திரத்தை வடிவமைத்து இருந்தனர். வெற்றி பெற்ற மற்றும் பங்கு பெற்ற மாணவர்களை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன், முதல்வர் ஆவுடையப்பன், துறை தலைவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர். இந்நிகழ்வில் வளாக தேர்வு அலுவலரும், இயந்திரவியல் துறை தலைவருமான ஆறுமுக சேகர் உடனிருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory