» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாகலாபுரம் மாணவ, மாணவியர்களுக்கு பசுமை பாதுகாவலர் விருது
புதன் 16, நவம்பர் 2022 8:44:41 PM (IST)
நாகலாபுரம் பள்ளி +1,+2 வேளாண் அறிவியல் கல்வி மாணவ-மாணவியர்களுக்கு " பசுமை பாதுகாவலர் விருது” வழங்கும் விழா நடந்தது
"மரங்கள் மற்றும் மூலிகை செடிகளை நேசிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதே சுற்றுச் சூழலை காக்கும் ஒரே வழி” என்ற நோக்கத்தில் தனது இல்லம் மற்றும் பொது இடங்களில் பசுமைப் பணி செய்து வரும் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளி +1,+2 வேளாண் அறிவியல் கல்வி மாணவ- மாணவியர்கள் 10 பேர் இனம் கண்டு அவர்களுக்கு "பசுமை பாதுகாவலர் விருது” வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
தலைமை ஆசிரியை சே. சுப்புலட்சுமி தலைமை தாங்கி தர்மபுரி பசுமை அறக்கட்டளை, தருமம் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட "பசுமை பாதுகாவலர்” விருது வழங்கி வாழ்த்தி பேசினார். தொழிற்கல்வி ஆசிரியர் கோ.சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். +1 மாணவர் மு.கார்த்திக், அ.அய்யல்ராஜ், மாணவியர்கள் வி.அபிநயா, ச.அபிருதி, க.தாமரைச் செல்வி, +2 மாணவர் சி.ரவிக்குமார், மா.வசந்தகுமார், மு. பழனிக்குமார், மாணவியர்கள் சொ.மாலதி, ல.சசிகலா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். முன்னதாக என்.சி.சி பொறுப்பு ஆசிரியர் ஜே.ஜான்ஸ்டானி வரவேற்றார். சரண- சாரணியர் பொறுப்பு ஆசிரியர் ச.இரமேஷ் நன்றி கூறினார்.