» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாகலாபுரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி.
வியாழன் 10, நவம்பர் 2022 4:53:50 PM (IST)
நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கல்வி மாவட்டம் நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப்பள்ளியில் "அப்துல்கலாம் அறிவியல் மன்றம்” சார்பாக அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமை ஆசிரியை சே.சுப்புலட்சுமி, பள்ளி நிர்வாக உறுப்பினர் ஜே.மாரிக் கண்ணபிரான், தொழிற்கல்வி ஆசிரியர் கோ.சுரேஸ் குமார், அறிவியல் ஆசிரியைகள் வே.அஸ்டலட்சுமி, ப.கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தங்களின் அறிவியல் படைப்புகளை காட்சி படுத்தி விளக்கம் அளித்தனர். முன்னதாக முதுகலை இயற்பியல் ஆசிரியர் வே.ஆறுமுகச்சாமி வரவேற்றார். நிறைவாக நிர்வாக முதுகலை உயிரியல் ஆசிரியை சு.மகேஸ்வரி நன்றி கூறினார்.
கோ. சுரேஸ்குமார்Nov 10, 2022 - 05:59:02 PM | Posted IP 162.1*****