» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மூக்குப்பீறி பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா
ஞாயிறு 18, செப்டம்பர் 2022 12:45:11 PM (IST)
மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகில் உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆழ்வார்திருநகரி ஊராட்சி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 97 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கினார்.
விழாவில் மூக்குப்பீறி ஊராட்சிமன்ற தலைவி கமலா கலையரசு, மூக்குப்பீறி ஊராட்சி மன்ற உறுப்பினர் கலையரசு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கு பள்ளித் தாளாளர் செல்வின் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் எட்வர்ட் நன்றி கூறினார்.