» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மாநில செஸ் போட்டி: ஏப். 2ல் துவக்கம்
புதன் 23, மார்ச் 2022 8:29:59 AM (IST)
தூத்துக்குடியில் மாநில அளவிலான செஸ் போட்டி ஏப். 2 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி காமராஜ் கல்லூரிச் செயலா் சோமு நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு மாநில சதுரங்க கழகம், தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம், காமராஜ் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தும் தமிழ்நாடு மாநில செஸ் சாம்பியன்சிப் போட்டிகள் ஏப். 2 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.
காமராஜ் கல்லூரியில் நடைபெறும் இந்த போட்டியில் ராபிட் எனப்படும் விரைவுப் போட்டி, பிளிட்ஸ் எனப்படும் அதிரடிப் போட்டி ஆகிய இரண்டு பிரிவுகளில் நடத்தப்படுகிறது. ஏப். 2 ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கும் ராபிட் செஸ் போட்டி 3 ஆம் தேதி பகல் 12.30 மணியுடன் நிறைவடையும். பிளிட்ஸ் செஸ் போட்டிகள் ஏப். 3 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணிக்கு நிறைவடையும். போட்டிகள் சுவிஸ் முறையில் 9 சுற்றுகளாக நடைபெறும். பரிசளிப்பு விழா 3 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும்.
மாவட்ட சதுரங்க கழகத்தின் அனுமதியுடன் தமிழகத்தைச் சோ்ந்த வீரா்கள் யாா் வேண்டுமானாலும், பொதுப்பிரிவு போட்டியில் கலந்து கொள்ளலாம். சாதாரண பிரிவு, கொடை பிரிவு என எந்த பிரிவில் கலந்து கொண்டாலும், விரைவுப் போட்டிக்கு நுழைவுக் கட்டணம் ரூ.300- மட்டும் செலுத்த வேண்டும். அதே மாதிரி அதிரடிப் போட்டிக்கு நுழைவுக் கட்டணம் ரூ.150 செலுத்த வேண்டும்.
பொதுப்பிரிவு போட்டியாக நடைபெற்றாலும் 8 வயதுக்குள்பட்டோா், 11 வயதுக்குள்பட்டோா், 14 வயதுக்குள்பட்டோா் மற்றும் கல்லூரி பிரிவு ஆகிய பிரிவுகளுக்கு 50 பரிசுகள் வழங்கப்படும். போட்டிக்கான நுழைவுக் கட்டணத்தை www.signinchess மற்றும் www.easypaychess ஆகிய இணையதளங்கள் மூலம் மாா்ச் 29 ஆம் தேதி வரை செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு 8760921739, 9442323852, 9894542121, 9865830030 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளவும் என்றாா்.
பேட்டியின்போது, காமராஜ் கல்லூரி முதல்வா் நாகராஜன், பொருளாளா் முத்துசெல்வம், உடற்கல்வி இயக்குநா் பாலசிங் தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழக தலைவா் ஜோ. பிரகாஷ், செயலா் கற்பகவல்லி, தூத்துக்குடி வட்டார சதுரங்க கழக துணைத் தலைவா் பிரபு, செயலா் ரைபின் தாா்சியஸ் ஆகியோா் உடனிருந்தனா்.