» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் விடுதிநாள் விழா

செவ்வாய் 15, மார்ச் 2022 5:33:19 PM (IST)



தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் விடுதிநாள் விழாவை முன்னிட்டு மாணவர்கள் இடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. 

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விடுதிநாள் விழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி விளையாட்டுப் போட்டிகள், நகைச்சுவை போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்கள் தங்களுக்குள் 4 அணிகளாக பிரிந்து போட்டிகளில் பங்கேற்றனர்கள். இறுதியில் பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

முதல் பரிசை சிவப்பு ராவணாஸ் அணியினரும் இரண்டாம் பரிசை பச்சை கேங்ஸ்டர்ஸ் அணியினரும் வென்றனர்கள். பரிசளிப்பு விழாவில் மீன்வள இணை இயக்குனர் அமல் சேவியர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரா. சாந்தகுமார் விழாவிற்கு தலைமை வகித்தார். விழாவில் விடுதிகாப்பாளர் சாந்தகுமார், துணை விடுதி காப்பாளர்கள்  துரைராஜா, மணிமேகலை மற்றும் விடுதிசெயலாளர்கள் தமிழரசன், விவிதா, உணவு மேலாளர்கள் குரலரசன், தீபிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory