» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பள்ளியில் உலக மகளிர் தின விழா
புதன் 9, மார்ச் 2022 8:20:18 AM (IST)
சாத்தான்குளம் மிக்கேல் அறக்கட்டளை மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பள்ளியில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மிக்கேல் அறக்கட்டளை மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பள்ளியில் உலக மகளிர் தின விழா தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தலைவர் பேர்சில் தலைமையில் நடைபெற்றது. அறக்கட்டளை இயக்குநர் சுசீலா மிக்கேல் வரவேற்றார். சிதம்பராபுரம் பங்குத்தந்தை இருதய சாமி ஆசியுரை வழங்கினார்.
விழாவில் பேரூராட்சித் தலைவர் ரெஜினி ஸ்டெல்லா பாய், ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயபதி, பெரியதாழை ஊராட்சித் தலைவர் பிரதீபா ஜெயசீலன், டாக்டர் சங்கரேஷ்வரி, ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயக்குனர் டினோ மெலினா, மார்னிங் ஸ்டார் ஆங்கிலப் பள்ளி முதல்வர் கலைச்செல்வி , மகளிர் சுயதொழில் பயிற்சியாளர்கள் ராதா, பெமினா, வழக்குரைஞர்கள் சுமித்ரா ராஜு, ஷீபா, உடன்குடி ஜெயலட்சுமி,யோகா ஆசிரியர்கள் ராஜலட்சுமி,கமலம், வள்ளி,சுகந்தி , முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆ செ ஜோசப், மருத்துவர் முத்துக்குமார், வர்த்தகசங்க செயலாளர் மதுரம் செல்வராஜ், ஜெயமேரி வளன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். வட்டார மனிதநேய நல்லிணக்கப் பெருமன்றம் செயலாளர் மகா.பால்துரை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். மருத்துவர் லட்சுமி நன்றி கூறினார்.பள்ளி மாணவியர்களின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.