» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

திங்கள் 21, பிப்ரவரி 2022 4:36:37 PM (IST)



தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.

உலகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 21) உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். முதுகலை தமிழாசிரியை சங்கரி என்ற ரேவதி தமிழ்மொழியின் சிறப்புப் பற்றி உரையாற்றினார்.

மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி, செய்யுள் ஒப்புவிக்கும் போட்டி, பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  விழா ஏற்பாடுகளை வ.உ.சி. கல்வியியல் கல்லூரி மாணவிகள் செய்திருந்தனர்.பேச்சியம்மாள் நன்றியுரை ஆற்றினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory