» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
பாரதியார் வித்யாலயம் பள்ளியில் உலக தாய்மொழி தினம்
திங்கள் 21, பிப்ரவரி 2022 4:36:37 PM (IST)
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.
உலகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 21) உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். முதுகலை தமிழாசிரியை சங்கரி என்ற ரேவதி தமிழ்மொழியின் சிறப்புப் பற்றி உரையாற்றினார்.
மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி, செய்யுள் ஒப்புவிக்கும் போட்டி, பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை வ.உ.சி. கல்வியியல் கல்லூரி மாணவிகள் செய்திருந்தனர்.பேச்சியம்மாள் நன்றியுரை ஆற்றினார்