» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

அன்னம்மாள் மகளிர் கல்லூரியில் தூய்மை இந்தியா திட்டம்

வியாழன் 23, செப்டம்பர் 2021 3:24:52 PM (IST)



தூத்துக்குடி, அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில்  பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கல்லூரி வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

கல்லூரியின் இளங்கலை மற்றும் முதுகலை கல்வியியல் பயிலும் மாணவிகள் கல்லூரி வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் உள்ள நெகிழிப்பைகள், நெகிழிப்பாட்டில்கள், காகிதங்கள் முதலியவற்றை அகற்றும் பணியினை மாணவிகள் ஆர்வமாகச் செய்தனர். மேலும் கல்லூரியில் அமைந்துள்ள மழைநீர் சேகரிக்கும் தொட்டி மற்றும் மழைநீர்வடிகால் ஆகியவற்றின் அருகில் உள்ள நெகிழிகளையும், குப்பைகளையும் அகற்றினர். இந்தத் தூய்மைப்படுத்தும் பணியினை கல்லூரி முதல்வர் அ.ஜாய்சிலின் சர்மிளா வழிகாட்டுதலின்படி கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் நாகலட்சுமி செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory