» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
ஸ்பிக் நகர் பள்ளியில் 75வது சுதந்திர தினவிழா
திங்கள் 16, ஆகஸ்ட் 2021 3:18:00 PM (IST)
தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளியில் 75வது ஆண்டு சுதந்திரதின விழா பள்ளி மைதானத்தில் நேற்று கொண்டப்பட்டது. விழாவில் ஸ்பிக் நிறுவனத்தின் முழு நேர இயக்குநரும், ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளித் தலைவருமான எஸ்.ஆர்.இராமகிருஷ்ணன் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்து சிறப்புரை ஆற்றினார்.
ஸ்பிக் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பாலு, பள்ளிச்செயலர் டி.எஸ்.பிரேம் சுந்தர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். விழாவில் "கோவிட் 19” தொற்று தடுப்புப்பணியில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களை ஊக்குவித்து, அவர்களைப் பாராட்டும் வகையில் அவர்களுக்கு நற்சான்றிதழ்களும், நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். நிறைவாக நாட்டுப்பண் இசைக்க விழா இனிதே முடிவடைந்தது.