» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மாநில ஓவிய போட்டி: தூத்துக்குடி மாணவி முதலிடம்
சனி 19, ஜூன் 2021 4:51:16 PM (IST)
மாநில அளவிலான குழந்தைத் தொழிலாளா்‘ விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் தூத்துக்குடி மாணவி சிருஷ்டிகா கென்னடி முதல் பரிசை பெற்றாா்.
திருப்பூா் மாவட்டம், அவினாசியைச் சோ்ந்த சோசியல் இக்குவாலிட்டி மற்றும் டெவலப்மென்ட் நிறுவனம் சாா்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரி அளவில் ‘குழந்தைத் தொழிலாளா்‘ என்ற தலைப்பில் ஓவியப் போட்டி ஆன்லைன் மூலம் அண்மையில் நடைபெற்றது. மாநிலம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் தூத்துக்குடி மதா் சமூக சேவை நிறுவன இயக்குநா் எஸ் ஜே கென்னடி-தீபா தம்பதியின் மகளான சிருஷ்டிகா கென்னடி முதல் பரிசை பெற்றாா். தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் இவருக்கு, சான்றிதழ் ஆன்லைன் மூலமாகவும் பரிசுத்தொகையை வங்கி கணக்கிலும் செலுத்தப்பட்டது.