» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
சாத்தான்குளம் பள்ளியில் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு
வியாழன் 6, பிப்ரவரி 2020 10:12:33 AM (IST)

சாத்தான்குளம் ஆவே மரியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
சாத்தான்குளம் ஆவே மரியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக அமைதி, அகிச்சை ஆகியவைகளை வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோலப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைபோட்டி, ஓவியப்போட்டி, நடன போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை பள்ளி தாளாளர் பீட்டர்ராஜ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் சொர்ணலதா, பள்ளியின் மேற்பார்வையாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டிக்கு நடுவர்களாக இத்தாலி நாட்டைச் சேர்ந்த மார்க்கோ இங்ளசிஸ், சான்றோ சியானி ஆகியோர் பணியாற்றினார்.
தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இத்தாலி நாட்டில் இருந்து வந்துள்ள மார்க்கோ இப்ளசிஸ், சான்றோ சியானி ஆகியோர் உலகயாத்திரை உறுப்பினராக உள்ளனர். இதன் அடிப்படையில் உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கு அமைப்பு மற்றும் பள்ளிகளுக்கு சென்று மகாத்மாகாந்தியின் அமைதி, அகிச்சையை வலியுறுத்தி வருகின்றனர். இந்தியா வந்துள்ள இவர்கள் கன்னியாகுமரி சென்று காந்தி மண்டபத்தில் யாத்திரையை முடித்து சொந்த நாட்டிற்கு திரும்பு கின்றனர் என பள்ளி தாளாளர் பீட்டர்ராஜ் தெரிவித்தார். சீனிவாசன் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி
புதன் 24, பிப்ரவரி 2021 12:40:21 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு
திங்கள் 15, பிப்ரவரி 2021 11:35:29 AM (IST)

மாவட்ட சிலம்பம் போட்டி : ஸ்ரீகணேசர் பள்ளி சாதனை
வெள்ளி 12, பிப்ரவரி 2021 4:11:15 PM (IST)

தூத்துக்குடி சக்தி வித்யாலயாவில் குடியரசு தின விழா
செவ்வாய் 26, ஜனவரி 2021 11:08:23 AM (IST)

காமராஜ் கலை கல்லூரியில் வாக்காளர் தினம்
திங்கள் 25, ஜனவரி 2021 9:05:15 PM (IST)

காமராஜ் கல்லூரியில் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா
சனி 23, ஜனவரி 2021 9:42:27 PM (IST)
