» சினிமா » செய்திகள்
Share
மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் நிறுவனம் வழங்க, "மெஜஸ்டிக் மல்டி மீடியா லிமிடெட்' நிறுவனம் தயாரிக்கும் பிரம்மாண்ட காதல் படம் "சிக்கு புக்கு.' இந்தப் படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ளார்.
பாலிவுட் நாயகி அம்ரிதா ராவின் தங்கை, ப்ரீத்திகா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, மறைந்த இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ஜீவாவின் சிஷ்யர் கே. மணிகண்டன் இயக்கி உள்ளார். இப்படம் விரைவில் வெளிவர உள்ளது.
இப்படம் குறித்து இயக்குநர் கே.மணிகண்டன் செய்தியாளரிடம் பேசுகையில், "சிக்கு புக்கு'னு ஏன் தலைப்பு வைத்திருக்கோம்னா ஆர்யா, ஸ்ரேயா இரண்டு பேரும் லண்டனிலிருந்து கிளம்பி காரைக்குடி வரை வருவாங்க. அதுக்காகதான் "சிக்கு புக்கு'னு டைட்டில் வைத்திருக்கிறோம்.
ஆர்யா, ஸ்ரேயாவை பார்க்குறது, காதல் வர்றது, அவங்க காதலை சொல்றது... இப்படி எங்க பார்த்தாலும் டிரெயின் சப்தம் இருக்கும், பேக்ட்ராப்ல டிரெயின், ரயில்வே ஸ்டேஷன் இருக்கும். அது மட்டும் இல்லாம இரண்டு டிராக் மாதிரி உள்ள இந்த இரண்டு கேரக்டர்கள் ஒன்று சேர்ந்த பிறகு என்ன பண்றாங்க என்பதுதான் படம்.
காதல் கதைன்னு சொல்லும்போது நான்கு விஷயங்கள் முக்கியம். அதில் முதலில் ஆர்ட்டிஸ்டோட கெமிஸ்ட்ரி. அதுதான் பிரதிபலிக்கும். அதுக்கு ஆர்யா இருந்தா நன்றாக இருக்கும்னு தோணுச்சி. நானும், அவரும் "உள்ளம் கேட்குமே' படத்தில் இணைந்து பணியாற்றியிருக்கோம். முக்கியமாக இந்தப் படத்தில் "கற்க நாம் கற்க..'னு ஒரு பாடல் இருக்கு. இது ஹிப் பாப் ஆல்பம் மாதிரியான ஒரு பாடல். ஆர்யா இதுவரையிலும் நல்ல நடிகர் என்று பேர் வாங்கியிருக்கார். ஆனால் நல்ல டான்ஸர்னு பேர் வாங்கல. அது இந்தப் பாடலில் நிறைவேறும். அப்படி ஒரு ஆட்டம் ஆடியிருக்கார்.
ஸ்ரேயாவுக்கு கவர்ச்சி நடிகைன்ற பேர் இருக்கு. அது இந்தப் படத்தில் மாற்றி அமைத்திருக்கிறோம். இந்தப் படத்தில் அவங்களோட நடிப்பும் பேசப்படும் விதமாக இருக்கும். ஸ்ரேயா நிஜ வாழ்க்கையில எப்படி பப்ளியான ஒரு பொண்ணோ... அதே மாதிரிதான் இந்தப் படத்திலேயும் நடிச்சிருக்காங்க.
ஆர்யாவோட கேரக்டர் பெயர் அர்ஜுன். வாழ்க்கையில இன்னைக்குதான் கடைசி நாள்னு நினைத்தா எப்படி இருப்போம்? அந்த மாதிரியான ஒரு கதாபாத்திரம். ஸ்ரேயா காலேஜ் முடிச்சிட்டு இந்தியாவுக்கு வரணும்னு நினைக்கிற பொண்ணு. இன்னைக்கு என்ன நடக்கும்? நாளைக்கு என்ன நடக்கும்? என்று ரொம்பவும் கணக்கு பார்க்குற பொண்ணு. இந்தப் படத்தில் வில்லன் கிடையாது. இவங்களோட இந்த இரண்டு விதமான குணாதிசயங்கள்தான் வில்லன். சந்தானம், ஜெகன், ப்ரீத்தி ஆகியோரும் இருக்காங்க.
இந்தப் படத்திற்கு கலோனியல் கஸின்ஸ் ஹரி - லெஸ்லி இசையமைத்திருக்காங்க. ரொமான்டிக் பாடல்கள் வித்தியாசமா செலக்ட் பண்ணி செய்திருக்காங்க. பாடல்களை கவிஞர் வாலி, பா.விஜய் இருவரும் எழுதியிருக்காங்க. பாட்டுக்கு நல்ல குரல் இருக்கணும்ங்கறதுக்காக பஞ்சாப்ல இருக்கிற படாலி பிரதர்ûஸ பாட வைத்திருக்கிறோம். அது ஒரு சோகப்பாட்டு. கேட்க அவ்வளவு அழகா இருக்கும். அவங்களோட குரலுக்காக அமிர்தசரஸýக்கு சென்று பதிவு பண்ணி வந்தோம். இந்தப் பாடல்களுக்கு அற்புதமா நடனம் அமைச்சிருக்காங்க ரேகா சின்னி பிரகாஷ், தினேஷ் ஆகியோர். படத்தின் வசனத்தை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதி இருக்கார்.
இப்படி எல்லாத்தையும் நல்லா தேர்வு செய்து லொக்கேஷன் சாதாரணமாக வைக்க முடியாது என்பதற்காக லண்டன்ல போய் ஷூட் பண்ணினோம். கலரா பண்ணியிருக்கோம். அதில் லண்டன்ல சில்வர் கலர். ஆனால் காதல் வந்த பிறகு பச்சையா இருக்கணும். அதுக்காக கர்நாடகாவிலுள்ள மலைக்காடுகளில் எடுத்திருக்கோம். இங்க இதுவரை யாரும் ஷூட் பண்ணினது கிடையாது. இதுக்கெல்லாம் நேர்மாறாக காரைக்குடியிலும் சில காட்சிகளை எடுத்திருக்கோம். இந்த காட்சிகள் நம்மளோட கலாச்சார வட்டத்துக்குள் இருக்கும். காரைக்குடி போர்ஷன் பிரவுன் கலரில் இருக்கும்.
ஜீவா சாரோட பாதிப்பு இல்லாம எங்களால் ஒண்ணுமே பண்ண முடியாது. ஆரம்ப காலத்திலிருந்தே அவர் கூட இருக்குறதால நாங்க பிரேம் வைக்கிறது, கலர் செலக்ட் பண்றது எல்லாத்திலயுமே அவர் எங்க பக்கத்தில் இருக்கிற மாதிரியே இருக்கு. அதனால் அவரை மீறி எங்களால் ஒன்னும் பண்ண முடியாது. சார் பக்கத்தில் இருந்தா எங்களை எப்படி பண்ண சொல்லுவாரோ அதை ஃபீல் பண்ணிதான் படத்தை எடுத்திருக்கோம்.
படம் முழுக்க கற்பனை கதைதான். ஆனால் நான் சந்தித்த ஒரே ஒரு கதாபாத்திரம் இருக்கும். முதலில் லண்டனிலேயே முடிக்கிற மாதிரி இருந்தது. அதன் பிறகு பயணத்தில் போகலாம்னு நினைத்து, லண்டன்லேர்ந்து காரைக்குடி வந்து முடிச்சிருக்கோம்.
இந்தப் படத்தை ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் ரிலீஸ் பண்ணுவோம். இந்தப் படமும் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்கிற நம்பிக்கை இருக்கிறது'' என்றார்.
ஆர்யா ஸ்ரேயா கலக்கும் சிக்கு புக்கு
செவ்வாய் 27, ஜூலை 2010 11:58:59 PM (IST)
மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் நிறுவனம் வழங்க, "மெஜஸ்டிக் மல்டி மீடியா லிமிடெட்' நிறுவனம் தயாரிக்கும் பிரம்மாண்ட காதல் படம் "சிக்கு புக்கு.' இந்தப் படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ளார்.பாலிவுட் நாயகி அம்ரிதா ராவின் தங்கை, ப்ரீத்திகா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, மறைந்த இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ஜீவாவின் சிஷ்யர் கே. மணிகண்டன் இயக்கி உள்ளார். இப்படம் விரைவில் வெளிவர உள்ளது.
இப்படம் குறித்து இயக்குநர் கே.மணிகண்டன் செய்தியாளரிடம் பேசுகையில், "சிக்கு புக்கு'னு ஏன் தலைப்பு வைத்திருக்கோம்னா ஆர்யா, ஸ்ரேயா இரண்டு பேரும் லண்டனிலிருந்து கிளம்பி காரைக்குடி வரை வருவாங்க. அதுக்காகதான் "சிக்கு புக்கு'னு டைட்டில் வைத்திருக்கிறோம்.
ஆர்யா, ஸ்ரேயாவை பார்க்குறது, காதல் வர்றது, அவங்க காதலை சொல்றது... இப்படி எங்க பார்த்தாலும் டிரெயின் சப்தம் இருக்கும், பேக்ட்ராப்ல டிரெயின், ரயில்வே ஸ்டேஷன் இருக்கும். அது மட்டும் இல்லாம இரண்டு டிராக் மாதிரி உள்ள இந்த இரண்டு கேரக்டர்கள் ஒன்று சேர்ந்த பிறகு என்ன பண்றாங்க என்பதுதான் படம்.
காதல் கதைன்னு சொல்லும்போது நான்கு விஷயங்கள் முக்கியம். அதில் முதலில் ஆர்ட்டிஸ்டோட கெமிஸ்ட்ரி. அதுதான் பிரதிபலிக்கும். அதுக்கு ஆர்யா இருந்தா நன்றாக இருக்கும்னு தோணுச்சி. நானும், அவரும் "உள்ளம் கேட்குமே' படத்தில் இணைந்து பணியாற்றியிருக்கோம். முக்கியமாக இந்தப் படத்தில் "கற்க நாம் கற்க..'னு ஒரு பாடல் இருக்கு. இது ஹிப் பாப் ஆல்பம் மாதிரியான ஒரு பாடல். ஆர்யா இதுவரையிலும் நல்ல நடிகர் என்று பேர் வாங்கியிருக்கார். ஆனால் நல்ல டான்ஸர்னு பேர் வாங்கல. அது இந்தப் பாடலில் நிறைவேறும். அப்படி ஒரு ஆட்டம் ஆடியிருக்கார்.
ஸ்ரேயாவுக்கு கவர்ச்சி நடிகைன்ற பேர் இருக்கு. அது இந்தப் படத்தில் மாற்றி அமைத்திருக்கிறோம். இந்தப் படத்தில் அவங்களோட நடிப்பும் பேசப்படும் விதமாக இருக்கும். ஸ்ரேயா நிஜ வாழ்க்கையில எப்படி பப்ளியான ஒரு பொண்ணோ... அதே மாதிரிதான் இந்தப் படத்திலேயும் நடிச்சிருக்காங்க.
ஆர்யாவோட கேரக்டர் பெயர் அர்ஜுன். வாழ்க்கையில இன்னைக்குதான் கடைசி நாள்னு நினைத்தா எப்படி இருப்போம்? அந்த மாதிரியான ஒரு கதாபாத்திரம். ஸ்ரேயா காலேஜ் முடிச்சிட்டு இந்தியாவுக்கு வரணும்னு நினைக்கிற பொண்ணு. இன்னைக்கு என்ன நடக்கும்? நாளைக்கு என்ன நடக்கும்? என்று ரொம்பவும் கணக்கு பார்க்குற பொண்ணு. இந்தப் படத்தில் வில்லன் கிடையாது. இவங்களோட இந்த இரண்டு விதமான குணாதிசயங்கள்தான் வில்லன். சந்தானம், ஜெகன், ப்ரீத்தி ஆகியோரும் இருக்காங்க.
இந்தப் படத்திற்கு கலோனியல் கஸின்ஸ் ஹரி - லெஸ்லி இசையமைத்திருக்காங்க. ரொமான்டிக் பாடல்கள் வித்தியாசமா செலக்ட் பண்ணி செய்திருக்காங்க. பாடல்களை கவிஞர் வாலி, பா.விஜய் இருவரும் எழுதியிருக்காங்க. பாட்டுக்கு நல்ல குரல் இருக்கணும்ங்கறதுக்காக பஞ்சாப்ல இருக்கிற படாலி பிரதர்ûஸ பாட வைத்திருக்கிறோம். அது ஒரு சோகப்பாட்டு. கேட்க அவ்வளவு அழகா இருக்கும். அவங்களோட குரலுக்காக அமிர்தசரஸýக்கு சென்று பதிவு பண்ணி வந்தோம். இந்தப் பாடல்களுக்கு அற்புதமா நடனம் அமைச்சிருக்காங்க ரேகா சின்னி பிரகாஷ், தினேஷ் ஆகியோர். படத்தின் வசனத்தை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதி இருக்கார்.
இப்படி எல்லாத்தையும் நல்லா தேர்வு செய்து லொக்கேஷன் சாதாரணமாக வைக்க முடியாது என்பதற்காக லண்டன்ல போய் ஷூட் பண்ணினோம். கலரா பண்ணியிருக்கோம். அதில் லண்டன்ல சில்வர் கலர். ஆனால் காதல் வந்த பிறகு பச்சையா இருக்கணும். அதுக்காக கர்நாடகாவிலுள்ள மலைக்காடுகளில் எடுத்திருக்கோம். இங்க இதுவரை யாரும் ஷூட் பண்ணினது கிடையாது. இதுக்கெல்லாம் நேர்மாறாக காரைக்குடியிலும் சில காட்சிகளை எடுத்திருக்கோம். இந்த காட்சிகள் நம்மளோட கலாச்சார வட்டத்துக்குள் இருக்கும். காரைக்குடி போர்ஷன் பிரவுன் கலரில் இருக்கும்.
ஜீவா சாரோட பாதிப்பு இல்லாம எங்களால் ஒண்ணுமே பண்ண முடியாது. ஆரம்ப காலத்திலிருந்தே அவர் கூட இருக்குறதால நாங்க பிரேம் வைக்கிறது, கலர் செலக்ட் பண்றது எல்லாத்திலயுமே அவர் எங்க பக்கத்தில் இருக்கிற மாதிரியே இருக்கு. அதனால் அவரை மீறி எங்களால் ஒன்னும் பண்ண முடியாது. சார் பக்கத்தில் இருந்தா எங்களை எப்படி பண்ண சொல்லுவாரோ அதை ஃபீல் பண்ணிதான் படத்தை எடுத்திருக்கோம்.
படம் முழுக்க கற்பனை கதைதான். ஆனால் நான் சந்தித்த ஒரே ஒரு கதாபாத்திரம் இருக்கும். முதலில் லண்டனிலேயே முடிக்கிற மாதிரி இருந்தது. அதன் பிறகு பயணத்தில் போகலாம்னு நினைத்து, லண்டன்லேர்ந்து காரைக்குடி வந்து முடிச்சிருக்கோம்.
இந்தப் படத்தை ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் ரிலீஸ் பண்ணுவோம். இந்தப் படமும் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்கிற நம்பிக்கை இருக்கிறது'' என்றார்.
மேலும் தொடரும் செய்திகள்
அனாதை குழந்தைகளுக்காக ஆங்கில பட சம்பளத்தை வழங்கும் கவர்ச்சி புயல் மல்லிகாஷெராவத்!
செவ்வாய் 7, செப்டம்பர் 2010 9:52:24 AM (IST)

நித்யானந்தா-ரஞ்சிதா கதை தெலுங்கில் தயாராகும் புதிய சினிமா!
செவ்வாய் 7, செப்டம்பர் 2010 9:32:04 AM (IST)
கிருஷ்ண லீலை படத்தின் கதையை கேட்டு ஆச்சர்யம் அடைந்த பாலசந்தர்!
ஞாயிறு 5, செப்டம்பர் 2010 7:16:56 PM (IST)

மீண்டும் சட்டம் ஒரு இருட்டறை!
வெள்ளி 3, செப்டம்பர் 2010 9:44:24 PM (IST)

நடிகை மீரா ஜாஸ்மினை விரைவில் மணப்பேன்: காதலன் மாண்டலின் ராஜேஷ் பேட்டி!
புதன் 1, செப்டம்பர் 2010 12:22:51 PM (IST)
ரஜினி, சிரஞ்சீவி, மோகன்லால் பங்கேற்ற 'எவர்கிரீன் எய்ட்டீஸ்' பார்ட்டி!
புதன் 1, செப்டம்பர் 2010 11:15:33 AM (IST)

எந்திரன்: இந்திய திரைவுலகம் பார்த்திராத சாதனை!
புதன் 1, செப்டம்பர் 2010 10:34:37 AM (IST)

சந்திரமுகி பாகம் 2ல் நடிக்கதயாராகும் அஜித்!
செவ்வாய் 31, ஆகஸ்ட் 2010 9:39:45 PM (IST)

பிரபுதேவா- நயன்தாரா டிசம்பரில் திருமணம்?
செவ்வாய் 31, ஆகஸ்ட் 2010 10:30:34 AM (IST)

ரஜினி காந்தின் செல்வாக்கை வேறு எந்த நடிகராலும் பெற முடியாது: நடிகர் ப்ருத்விராஜ் புகழாரம்!
திங்கள் 30, ஆகஸ்ட் 2010 5:46:58 PM (IST)

சூட்டிங் இல்லாவிட்டால் விவசாயம்: நடிகர் விக்னேஷ் புது திட்டம்!
திங்கள் 30, ஆகஸ்ட் 2010 5:42:22 PM (IST)
ஷாஹித்துக்கு கற்றுக் கொடுத்த அசின்-கடுப்பான பிரியங்கா சோப்ரா!
ஞாயிறு 29, ஆகஸ்ட் 2010 7:44:19 PM (IST)


