» சினிமா » செய்திகள்

லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணையும் ஜிகர்தண்டா 2 ஷூட்டிங் தொடக்கம்

செவ்வாய் 13, டிசம்பர் 2022 11:09:32 AM (IST)



கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் ஜிகர்தண்டா 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு ரிலீசான படம், ‘ஜிகர்தண்டா’. பாபி சிம்ஹா, சித்தார்த் உட்பட பலர் நடித்த இந்தப் படம் ஹிட்டானது. 2 தேசிய விருதுகளும் கிடைத்தன. இப்போது இதன் 2ம் பாகம் உருவாகிறது. ராகவாலாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். திருநாவுக்கரவு ஒளிப்பதிவு செய்கிறார்.

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச்நிறுவனமும், பைவ் ஸ்டார் கதிரேசனும் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியுள்ளது. படத்தின் மிரட்டலான டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory