» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டாடா ஸ்டீல் செஸ்: உலகின் நம்பர் 2 வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

புதன் 18, ஜனவரி 2023 11:33:42 AM (IST)

டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் உலகின் நம்பர் 2 வீரர் டிங் லிரனை வீழ்த்தியுள்ளார் இந்தியாவின் பிரக்ஞானந்தா.

இதற்கு முன்பு விளையாடிய மூன்று ஆட்டங்களையும் டிரா செய்திருந்தார் பிரக்ஞானந்தா. நான்காவது சுற்றில் டிங் லிரனை எதிர்கொண்டார். லைவ் தரவரிசையில் கார்ல்சனுக்கு அடுத்து 2800 புள்ளிகளைக் கொண்ட மற்றொரு வீரர் லிரன். இந்நிலையில் லிரனுக்கு எதிரான 4-வது சுற்றில் 73 நகர்த்தல்களின் முடிவில் உலகின் நம்பர் 2 வீரரை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.  

மற்றொரு ஆட்டத்தில் உலக சாம்பியன் கார்ல்சனை அனிஷ் கிரி தோற்கடித்து முதலிடத்தைப் பிடித்தார். இதற்கு முன்பு கிளாசிகல் பிரிவில் 2011-ல் 16 வயதில் கார்ல்சனை வீழ்த்தினார் கிரி. 12 வருடங்கள் கழித்து கிளாசில் செஸ் போட்டியில் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தியுள்ளார். இதுவரை டாடா ஸ்டீல் செஸ் போட்டியை கிரி வென்றதில்லை. 

நான்காவது சுற்றின் முடிவில் 2.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா 4-வது இடத்திலும் 2 புள்ளிகளுடன் கார்ல்சன் 7-வது இடத்திலும் உள்ளார்கள். வியாழன் அன்று நடைபெறும் 5-வது சுற்றில் அனிஷ் கிரியை எதிர்கொள்கிறார் பிரக்ஞானந்தா. ஜனவரி 28 அன்று நடைபெறும் 12-வது சுற்றில் உலக சாம்பியன் கார்ல்சனுடன் மோதுகிறார். இப்போட்டி ஜனவரி 29 அன்று நிறைவுபெறுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory