» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இலங்கை சாம்பியன்
திங்கள் 12, செப்டம்பர் 2022 8:33:46 AM (IST)
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 6-ஆவது முறையாக இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
சூப்பா் 4 பிரிவில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற பாகிஸ்தான்-இலங்கை அணிகள் நேற்று இரவு துபையில் நடந்த இறுதிச் சுற்றில் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பௌலிங்கை தோ்வு செய்தது. முதலில் ஆடிய இலங்கை அணி 170/6 ரன்களைக் குவித்தது. பானுகா ராஜபட்ச அபாரமாக ஆடி 71 ரன்களை விளாசினாா். 171 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் வீரா்களால் இலங்கை பௌலா்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினா்.
தொடக்க பேட்டா் முகமது ரிஸ்வான் 55 (1 சிக்ஸா், 4 பவுண்டரி), இப்திகாா் அகமது 32 ஆகியோா் மட்டுமே ஒரளவு ரன்களை எடுத்தனா். ஏனைய வீரா்கள் ஒற்றைய இலக்க ரன்களோடு வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினா். 20 ஓவா்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பாகிஸ்தான். இலங்கை தரப்பில் பிரமோத் மதுஷன் 4, ஹஸரங்க 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 6-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.