» செய்திகள் » சிறப்பு பார்வை

Share

மகாசிவராத்திரியின் மகிமை

வெள்ளி 12, பிப்ரவரி 2010 5:25:37 PM (IST)

சிவனுக்கு உகந்த ராத்திரி சிவராத்திரி, மாதம்தோறும் வந்தாலும் மாசிமாதம் வரும் சிவராத்திரியே மகாசிவராத்திரியாகும். மாசி மாதம் கிருஷ்ண பட்சம் சதூர்த்தி திதியன்று அமாவாசைக்கு முதல் சிவராத்திரி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

சிவாயநம என சிந்தித்தால் அபாயம் நமக்கில்லை என்பது மூத்தோர் வாக்கு. பெண்களுக்கான ராத்திரி நவராத்திரி. அதேபோல் ஆண்களுக்கான ராத்திரி சிவராத்திரி. எனவே, ஆண்கள் சிவராத்திரி விரதம் மேற்கொண்டால் எல்லா ஐஸ்வர்யங்களும் கிட்டும். மகா சிவராத்திரி அன்று நள்ளிரவு 11.30 மணி முதல் காலை 4 மணிக்குள் நான்கு கால பூஜைகள் நடைபெறும்.

முதல் காலத்தில் பயறற்ற சாதமும், 2ம் காலத்தில் சர்க்கரை பொங்கலும், 3ம் காலத்தில் தும்பை பூவால் அர்ச்சனை செய்து பரமேஸ்வரனை வழிபட்டால் ஆயுள் தீர்க்கமாகும். மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுடன் சொர்க்கலோக பாக்கியமும் கிட்டும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் மேற்கொண்டால் அவர் சிவகதி அடைவதுடன் அவர்களின் மூவேழு தலைமுறைக்கும் சகல செளபாக்கியங்களும் பெற்று முக்தி அடைவார்கள் என்பது ஐதீகம்.







மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads