» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை
சாத்தான்குளத்திற்கு பழைய பெயரையே சூட்ட வேண்டும் : அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை
வியாழன் 9, ஜூலை 2020 12:24:07 PM (IST)
சாத்தான்குளம் ஊருக்கு மீண்டும் அதன் பழைய பெயரான திருக்கொழுந்தாபுரம் அல்லது வீர மார்த்தாண்ட நல்லூர் என்ற பெயரை அரசு சூட்ட வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது ஒரு புறமிருக்க சாத்தான்குளம் ஊரின் பெயரை அதன் பழைய பெயரான திருக்கொழுந்தாபுரம் அல்லது வீர மார்த்தாண்ட நல்லூர் என்ற பெயரையே அரசு சூட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வழக்கறிஞர் வேணுகோபால் என்பவரிடம் கேட்ட போது கூறும் போது, சாத்தான்குளம் ஊரின் வரலாறை பார்க்கும் போது அந்த ஊரின் பழைய பெயர் திருக்கொழுந்தாபுரம் மற்றும் வீரமார்த்தாண்ட நல்லூர் என தெரிய வருகிறது.
இந்த ஊரின் பெயர் சாத்தான்குளம் என மாறியதற்கு 2 காரணங்கள் கூறப்படுகிறது. சாத்து என்றால் வியாபாரம், வணிகம் என பொருள். பொருட்களை சந்தைப்படுத்த வணிகர்கள் வருவதால் சாத்து குளம் என்ற பெயர் மருவி சாத்தான்குளம் ஆனதாகவும், இரண்டாவதாக 17 ம் நூற்றாண்டு காலத்தில் குலசேகர பாண்டியனுக்கு சொந்தமான நிலங்கள் சாத்தான்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்துள்ளது. இவற்றை சாத்தன் சாம்பவன் என்பவர் கவனித்து கொண்டிருந்தாராம்.
சாத்தன் சாம்பவனுக்கு அப்பகுதியில் வசித்து வந்த ஒருவரது மகள் மீது காதல் ஏற்பட்டதாகவும் அப்பெண்ணும் அவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த பெண் வீட்டார் சாத்தன் சாம்பவனை பழிவாங்கத் திட்டமிட்டு இரவில், அவர் வரும் வழியில் பொய்குழி வெட்டி அதன்மீது, பிரப்பம்பாயை விரித்து மண்ணைத்தூவி அதை மறைத்தனர். வழக்கம்போல் குதிரையில் வந்த பொய் குழியின் மீது குதிரை கால் வைத்ததும் குதிரையுடன் குழியில் விழுந்துள்ளார். திட்டமிட்டபடி பெரிய கற்களை எறிந்து அவரை எழவிடாமல் செய்து குதிரையுடன் புதைத்துவிட்டார்களாம்.
மறுநாள் இச்செய்தியைக் கேள்வியுற்ற அவரது காதலி அழுது அரற்றி தன் பெற்றோரையும், உறவினரையும் திட்டி சாபமிட்டதாகவும் விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். அந்த சாபம் காரணமா அல்லது வேறு காரணங்களாலோ சாத்தான்குளத்தில் பெரிய தொழில் வளர்ச்சிகளோ,வேறு முன்னேற்றங்களோ இன்று வரை ஏற்படவில்லை.
மேலும் சட்டமன்ற தொகுதியாக இருந்த சாத்தான்குளம் தொகுதி மறுசீரமைப்பின் போது நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு சக்தி உண்டு. எனவே சாத்தான்குளம் என்ற பெயரை மீண்டும் திருக்கொழுந்தாபுரம் அல்லது வீர மார்த்தாண்ட நல்லூர் என்ற பெயரை அரசு சூட்ட வேண்டும். இவ்வாறு வழக்கறிஞர் வேணுகோபால் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
P.S. SundaramJul 9, 2020 - 05:21:06 PM | Posted IP 173.2*****
Sattankulathil Kulam Thundru Poi Vittathal antha nilaiyil athan peyarai thirukolundhapuram and Veeramarthanda Nallur endru peyar mattram karuthai munvaitha vazhakaringar, Venugopal avargaluku naam nandri kadan selutha vendum. Thoothukudiku Thirumanthiranagar endru peyarum ullathu.
மேலும் தொடரும் செய்திகள்
_1607430322.jpg)
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் போக்குவரத்து கடும் பாதிப்பு : விவிடி மேம்பாலம் பணிகளை துவக்க மக்கள் கோரிக்கை!
செவ்வாய் 8, டிசம்பர் 2020 5:54:48 PM (IST)

இ பாஸ் விவகாரம் : தமிழக முதல்வருக்கு அதிமுக.,வினரே எதிர்ப்பு !
சனி 1, ஆகஸ்ட் 2020 10:29:12 AM (IST)

தூத்துக்குடியில் வெளியே சுற்றும் கரோனா நோயாளிகள் : பொதுமக்கள் அச்சம்
வியாழன் 23, ஜூலை 2020 12:55:43 PM (IST)

மகாமாரியை கட்டுப்படுத்த ஆலயங்கள் திறக்கப்படுமா ? ஆன்மிக பெரியாேர்கள் அரசுக்கு கோரிக்கை
வெள்ளி 10, ஜூலை 2020 11:07:59 AM (IST)

ஜாதி வாட்ஸ்ஆப் குழுக்கள் வைத்திருந்தால் சஸ்பெண்ட் : போலீசாருக்கு எஸ்.பி., எச்சரிக்கை
செவ்வாய் 7, ஜூலை 2020 11:06:56 AM (IST)

தனிபிரிவு ஏட்டு பணியிட மாற்றம்... சமுக விரோதிகள் கொண்டாட்டம்... பொதுமக்கள் வருத்தம்!!
வியாழன் 11, ஜூன் 2020 12:43:40 PM (IST)

ப. சுகுமார்Oct 17, 2020 - 06:00:51 AM | Posted IP 108.1*****