» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அமைச்சர் சேகர் பாபு மகன்களின் நிறுவனத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:50:17 PM (IST)
சென்னை மயிலாப்பூரில் உள்ள அமைச்சர் சேகர்பாபுவின் மகன்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகன்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இன்று (ஏப். 13) அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மயிலாப்பூரில் உள்ள சாலை கட்டுமான டெண்டர் நிறுவனம் மற்றும் வடபழனி, கீழ்ப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட 5 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் சேகர் பாபுவின் மகன்கள் ஜெயசிம்மன் மற்றும் விக்னேஷ் ஆகியோர் நடத்தி வரும் இந்த நிறுவனத்தில், தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பான புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினரின் முன்னிலையில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் சோதனை நிறைவடைந்த பின்னரே தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகள் கோரி 166 மனுக்கள்!
திங்கள் 11, மே 2026 5:50:53 PM (IST)

மதிமுக பொதுச் செயலர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் ஜோசப் விஜய்
திங்கள் 11, மே 2026 4:57:02 PM (IST)

முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய்!
திங்கள் 11, மே 2026 3:32:24 PM (IST)

எடப்பாடி பழனிசாமிக்கு 17 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே ஆதரவு: எஸ்.பி. வேலுமணிக்கு மெஜாரிட்டி?
திங்கள் 11, மே 2026 3:32:01 PM (IST)

இயற்பியல் துறையைக் காக்க அரசு முன்வர வேண்டும்: அஸ்ட்ரோ கிளப் கூட்டத்தில் தீர்மானம்!
திங்கள் 11, மே 2026 3:31:07 PM (IST)

பிளஸ் 2 தேர்வில் சாதனை: மாணவிக்கு ஸ்கூட்டர் பரிசளித்த பி.டி. செல்வகுமார்!
திங்கள் 11, மே 2026 12:44:50 PM (IST)










