» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி முறையீடு
வெள்ளி 6, மார்ச் 2026 5:32:10 PM (IST)
நாங்குநேரியில் நடந்த கொடூர இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் முறையீடு செய்துள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து பஜார் பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த 9 பேர் கொண்ட கும்பல், அங்கு நின்றிருந்த பொதுமக்களைச் சரமாரியாக வெட்டியது. இந்தத் தாக்குதலில் ஜான் (42) மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி திருநாத் கட்டா ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 6 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாகப் போலீஸார் 9 பேரைக் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதி ராமன் அமர்வு முன்பாக வழக்கறிஞர் ஆயிரம் கே.செல்வகுமார் ஆஜராகி ஒரு முக்கிய முறையீட்டை முன்வைத்தார். அதில் அவர் குறிப்பிட்டதாவது: "நாங்குநேரி தாக்குதலில் கொல்லப்பட்ட வடமாநிலத் தொழிலாளி உள்ளிட்ட இருவரின் குடும்பங்களுக்குத் தமிழக அரசு இதுவரை எந்தவிதமான நிவாரணமோ அல்லது இழப்பீடோ அறிவிக்கவில்லை. எந்தக் காரணமும் இன்றி கொல்லப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளியின் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றமே இந்த விவகாரத்தைத் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
இந்த முறையீட்டைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணம் குறித்துத் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை உரிய அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து விஜய் மேல்முறையீடு
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:52:43 PM (IST)

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கும் பணி : ஆட்சியர் சுகுமார் ஆய்வு
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:33:47 PM (IST)

உங்கள் வீட்டில் திருடிவிட்டு ரூ.2000 கொடுத்தால் வாங்குவீர்களா? சீமான் கேள்வி
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:23:56 PM (IST)

தமிழர் வாழ்வில் அமைதி, வளம் பெருகட்டும்: சரத்குமார் புத்தாண்டு வாழ்த்து!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:05:54 PM (IST)

அமைச்சர் சேகர் பாபு மகன்களின் நிறுவனத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:50:17 PM (IST)

மீனவர் நலநிதி ரூ.20,000-ஆக உயர்த்தப்படும் : குமரி பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய் உறுதி!
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:04:49 PM (IST)







