» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சட்டசபையில் இருந்து வெளியேறியது ஆளுநர் பதவிக்கு அழகல்ல: ஸ்டாலின் கண்டனம்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 12:25:01 PM (IST)
சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறியது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டசபைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மலர்க்கொத்து, கலைஞர் மு.கருணாநிதி வரலாறு புத்தகத்தை கொடுத்து சபாநாயகர் அப்பாவு வரவேற்றார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியது. சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் உரையை படிக்காமல் இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். 4-வது ஆண்டாக இந்த ஆண்டும் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறியதால் சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
சட்டசபையின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை, என்னை அவமதித்து விட்டீர்கள் எனக்கூறி ஆளுநர் வெளியேறினார். அப்போது, அமைச்சரவை எழுதி கொடுத்ததை படிக்க வேண்டும். சட்டசபை மரபை ஆளுநர் மீற வேண்டாம் என சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் மக்கள் சபையை ஆளுநர் அவமதித்துள்ளதாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: சட்டசபையில் இருந்து வெளியேறியது ஆளுநர் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. உரையை வாசிக்காமல் சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறியதை பேரவை ஏற்கவில்லை.
ஆளுநரின் நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல். ஆளுநர் மக்கள் நலனில் அக்கறை உள்ளவராக இருக்க வேண்டும். பா.ஜ.க. ஆளாத மாநில அரசுகளுக்கு இடையூறாக இருப்பது ஆளுநர்களின் வாடிக்கையாக உள்ளது. அமைச்சரவை எழுதி அனுப்பிய உரையை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும். பொது மேடைகளில் அரசியல் பேசி அவதூறு பரப்பி வருகிறார் ஆளுநர் என்று பேசினார்.
தமிழக சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டசபைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மலர்க்கொத்து, கலைஞர் மு.கருணாநிதி வரலாறு புத்தகத்தை கொடுத்து சபாநாயகர் அப்பாவு வரவேற்றார்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியது. சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் உரையை படிக்காமல் இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். 4-வது ஆண்டாக இந்த ஆண்டும் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறியதால் சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
சட்டசபையின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை, என்னை அவமதித்து விட்டீர்கள் எனக்கூறி ஆளுநர் வெளியேறினார். அப்போது, அமைச்சரவை எழுதி கொடுத்ததை படிக்க வேண்டும். சட்டசபை மரபை ஆளுநர் மீற வேண்டாம் என சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் மக்கள் சபையை ஆளுநர் அவமதித்துள்ளதாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: சட்டசபையில் இருந்து வெளியேறியது ஆளுநர் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. உரையை வாசிக்காமல் சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறியதை பேரவை ஏற்கவில்லை.
ஆளுநரின் நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல். ஆளுநர் மக்கள் நலனில் அக்கறை உள்ளவராக இருக்க வேண்டும். பா.ஜ.க. ஆளாத மாநில அரசுகளுக்கு இடையூறாக இருப்பது ஆளுநர்களின் வாடிக்கையாக உள்ளது. அமைச்சரவை எழுதி அனுப்பிய உரையை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும். பொது மேடைகளில் அரசியல் பேசி அவதூறு பரப்பி வருகிறார் ஆளுநர் என்று பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் பங்கேற்ற த.வெ.க. மாநாட்டில் துயரம் : கூட்டத்தில் மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 8:46:26 PM (IST)

டிஆர்பி தேர்வில் வெற்றிபெற்ற 35 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகள்: அமைச்சர் வழங்கல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:27:08 PM (IST)

திமுகவை பொறுத்தவரை தேர்தல் வெற்றிக்கு மட்டுமே கூட்டணி : விஜய் விமர்சனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:18:51 PM (IST)

பிரச்சினையை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாதவர் விஜய் : எடப்பாடி பழனிசாமி சாடல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:02:27 PM (IST)

சிவாலய ஓட்டம்: கனிமவள லாரிகளுக்கு 2 நாட்கள் தடை - எஸ்பி ஸ்டாலின் உத்தரவு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:38:17 PM (IST)

தோல்வி பயத்தால் திமுக அரசு ரூ.5000 கொடுத்துள்ளது: ஜெயக்குமார் விமர்சனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 12:15:17 PM (IST)










