» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கனமழை எச்சரிக்கை: நெல்லை-தூத்துக்குடி உள்பட 10 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்பு படை
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:41:16 AM (IST)
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, நெல்லை-தூத்துக்குடி உள்பட 10 மாவட்டங்களுக்கு விரைந்து பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்கள் மற்றும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதேபோல் நாளை (திங்கட்கிழமை) தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறிஉள்ளது.
கனமழை எச்சரிக்கையை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், அவசரகாலங்களில் உடனடியாக பேரிடர் மேலாண்மைத் துறைக்குத் தகவல் தெரிவிக்கவும் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது. பேரிடர் மீட்புக் குழுக்களும் இந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கனமழையை எதிர்கொள்ளும் வகையில், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசரத் தகவல்கள் மற்றும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட ஆட்சியர்கள் பேரிடர் மேலாண்மைத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். பேரிடர் மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தமிழ்நாடு மீட்புப் படையினர் அடங்கிய குழுக்கள் 10 மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பேரிடர் மேலாண்மைத் துறை, அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அவர்கள் மூலம் முறையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது என்று பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னையில் இன்று ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து: பயணிகள் பாதிப்பு!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:14:58 AM (IST)

புதுச்சேரியில் டிச.9-ல் விஜய் பொதுக் கூட்டம்: 5,000 பேரை மட்டுமே அனுமதிக்க நிபந்தனை
சனி 6, டிசம்பர் 2025 4:48:55 PM (IST)

குமரி மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு நாள்: ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!
சனி 6, டிசம்பர் 2025 4:11:06 PM (IST)

கன்னியாகுமரி புதிய பேராயராக கிறிஸ்டோபர் விஜயன் தேர்வு: நாளை பதவியேற்பு விழா
சனி 6, டிசம்பர் 2025 3:51:18 PM (IST)

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு : வானிலை ஆய்வாளர் கணிப்பு!
சனி 6, டிசம்பர் 2025 11:51:16 AM (IST)










