» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி கடற்கரையில் 50- க்கும் மேற்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

வெள்ளி 7, நவம்பர் 2025 4:58:48 PM (IST)



கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதி கடற்கரை நடைபாதை பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் பின்புறம் கடற்கரை நடைபாதை பகுதியில் பல ஆண்டுகளாக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சுமார் 50- க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளால் சுகாதார சீர்கேடு தொடர்பான புகார்கள் எழுந்தன. இதுகுறித்து உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, பகவதியம்மன் கோயில் மேலாளர் ஆனந்த் உத்தரவின்பேரில் தேவசம் போர்டு அதிகாரிகள் தலைமையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி தொடங்கியது. இதையொட்டி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: சுற்றுலாப் பயணிகள் கடற்கரை நடைபாதையில் சுலபமாக செல்ல முடியாத அளவுக்கு இருந்த அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல், சுகாதாரம், சுற்றுலா வசதிக்காக தொடர்ந்து இப்பகுதி கண்காணிக்கப்படும் என்று தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory