» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது
வெள்ளி 7, நவம்பர் 2025 4:56:19 PM (IST)
நாகர்கோவிலில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம், மீனம்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அகஸ்டின் ஜான் (55). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக தருவதாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிலர் கூறினர். இதை நம்பிய அகஸ்டின்ஜான், நாகர்கோவிலில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து ரூ. 35 லட்சம், ரூ.15 லட்சத்துக்கு காசோலைகளை அளித்தார்.
இந்த பணத்துக்கு ரூ. 1 கோடியாக திருப்பி தருவதாக அவர்கள் கூறினர். ஆனால், அவர்கள் கூறியபடி பணத்தைத் திருப்பித் தரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அகஸ்டின்ஜான் இதுகுறித்து நாகர்கோவில், வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரித்த போலீசார் அகஸ்டின்ஜானிடம் பணம் வாங்கி ஏமாற்றியது, கேரள மாநிலம் ஆற்றிங்கால் பகுதியைச் சேர்ந்த மோகனன் (65), குமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ள மேல்பாலையைச் சேர்ந்த சுந்தர்ராஜ், பந்தளத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (65) என்பது தெரியவந்தது. வடசேரி காவல் நிலைய போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புதுச்சேரியில் டிச.9-ல் விஜய் பொதுக் கூட்டம்: 5,000 பேரை மட்டுமே அனுமதிக்க நிபந்தனை
சனி 6, டிசம்பர் 2025 4:48:55 PM (IST)

குமரி மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு நாள்: ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!
சனி 6, டிசம்பர் 2025 4:11:06 PM (IST)

கன்னியாகுமரி புதிய பேராயராக கிறிஸ்டோபர் விஜயன் தேர்வு: நாளை பதவியேற்பு விழா
சனி 6, டிசம்பர் 2025 3:51:18 PM (IST)

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு : வானிலை ஆய்வாளர் கணிப்பு!
சனி 6, டிசம்பர் 2025 11:51:16 AM (IST)

இண்டிகோ விமான சேவை ரத்து: பெங்களூரு-சென்னை இடையே சிறப்பு ரயில்கள்
சனி 6, டிசம்பர் 2025 11:45:19 AM (IST)










