» செய்திகள் » தமிழகம்
Share
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர் வி.கே.சுப்புராஜ் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கும் கல்லூரி கல்வி இயக்குனரகத்திற்கும் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் இருந்து 300 அடி தூரம் வரை சிகரெட், பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்க தடை விதிக்கவேண்டும். இந்த சுற்றறிக்கையை அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவித்து புகையிலை பொருட்கள் விற்காமல் இருப்பதை உறுதிபடுத்தவேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை தமிழகத்தில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உள்ளனர். மாவட்ட கல்வி அதிகாரிகள், முதன்மை கல்வி அதிகாரிகள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உள்ளனர்.
அதேப்போல அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப கல்லூரி கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே அண்ணாபல்கலைக்கழகம் புகையிலை பயன்படுத்தாத வளாகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிலையங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை: தமிழக அரசு உத்தரவு!
புதன் 10, மார்ச் 2010 10:21:46 AM (IST)
பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அருகே 300 அடி தூரத்திற்குள் சிகரெட், பான்பராக் உள்ளிட்ட புகையிலைப்பொருட்கள் விற்க தமிழக அரசு தடைவிதித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர் வி.கே.சுப்புராஜ் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கும் கல்லூரி கல்வி இயக்குனரகத்திற்கும் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் இருந்து 300 அடி தூரம் வரை சிகரெட், பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்க தடை விதிக்கவேண்டும். இந்த சுற்றறிக்கையை அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவித்து புகையிலை பொருட்கள் விற்காமல் இருப்பதை உறுதிபடுத்தவேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை தமிழகத்தில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உள்ளனர். மாவட்ட கல்வி அதிகாரிகள், முதன்மை கல்வி அதிகாரிகள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உள்ளனர்.
அதேப்போல அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப கல்லூரி கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே அண்ணாபல்கலைக்கழகம் புகையிலை பயன்படுத்தாத வளாகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடரும் செய்திகள்
நெல்லை தொழில்நுட்ப பூங்கா நவம்பரில் செயல்படும்: அமைச்சர் பூங்கோதை
எம்.செல்வா | வியாழன் 29, ஜூலை 2010 5:50:56 PM (IST)

ஹார்லிக்ஸ் பாட்டில்கள் திருட்டு: அழகிரி மீது ஜெயலலிதா சந்தேகம்
வியாழன் 29, ஜூலை 2010 4:37:19 PM (IST)

தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் மகள் மாலா மரணம்-கருணாநிதி இரங்கல்
வியாழன் 29, ஜூலை 2010 3:49:49 PM (IST)

பாஸ்போர்ட் கிளியரன்ஸ் சர்ட்டிபிகேட் வழங்க லஞ்சம் வாங்கிய ஏட்டு கைது
வியாழன் 29, ஜூலை 2010 11:59:08 AM (IST)

அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு நூலகப் பணியாளர் தேர்வு விண்ணப்பம் விநியோகம்
வியாழன் 29, ஜூலை 2010 11:21:39 AM (IST)

நடுக்கடலில் 4 நாட்களாக உயிருக்கு போராடிய 5 இலங்கை மீனவர்கள் மீட்பு
ஸ்ரீ | புதன் 28, ஜூலை 2010 10:27:40 PM (IST)
மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற பி.சி., எம்.பி.சி. மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் பரிசு
புதன் 28, ஜூலை 2010 4:21:05 PM (IST)

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று மாலை திறப்பு
புதன் 28, ஜூலை 2010 12:33:42 PM (IST)

கிறிஸ்தவ பாதிரியார் மீது புதுப்பெண் செக்ஸ் புகார்
புதன் 28, ஜூலை 2010 11:54:58 AM (IST)

கோவையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி தே.மு.தி.க ஆர்ப்பாட்டம்
புதன் 28, ஜூலை 2010 10:38:17 AM (IST)

மாணவியிடம் சில்மிஷம்: ஆசிரியருக்கு தர்மஅடி!
புதன் 28, ஜூலை 2010 10:17:59 AM (IST)

