» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி ஆக்கி வீரர் உள்பட 2 பேர் பலி: நெல்லையில் பரிதாபம்

புதன் 19, மார்ச் 2025 8:35:58 AM (IST)

நெல்லையில் கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி ஆக்கி வீரர் உள்பட 2 பேர் பரிதாபமாக  உயிரிழந்தனர். 

நெல்லை கொக்கிரகுளம் கண்ணப்பநாயனார் தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகன் வேலாயுதம் (28). ஆக்கி வீரரான இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். மேலும் தனது தந்தைக்கு உதவியாக வீட்டில் உள்ள மாடுகளை பராமரித்து பால் வியாபாரமும் செய்து வந்தார்.

இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ரவி (45). இவர் கஜேந்திரனுக்கு உதவியாக அவருடன் சேர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கஜேந்திரன் வீட்டில் குளியலறை கட்டும்பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த கட்டிடத்திற்கு தண்ணீர் நனைப்பதற்கு நேற்று காலையில் வேலாயுதம் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதனை அங்கு வந்த ரவி பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் வேலாயுதத்தை காப்பாற்ற சென்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்து 2 பேரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையில் கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி ஆக்கி வீரர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital



New Shape Tailors







Thoothukudi Business Directory