» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விலைவாசி உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 11:32:09 AM (IST)
நாட்டில் பெருகி வரும் விலைவாசி உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென விஜய்வசந்த் எம்பி ஒத்திவைப்பு தீர்மானம் முன்மொழிந்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறிப்பாக காய்கறிகள், சமையல் எண்ணெய், பால் போன்ற பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு போகிறது. இது பொதுமக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தி அவர்கள் மீதான சுமை அதிகரித்த வண்ணம் உள்ளது.
ஆனால் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டிலோ, நிதி அறிக்கையிலோ விலைவாசியை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் மத்திய அரசு முன்வைக்கவில்லை. பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம். சமையல் எரிவாயு மற்றும் எரிவாயு விலைகளை கட்டுப்படுத்தி மக்கள் சுமையை குறைப்பதற்கு அரசு முன்வரவில்லை என்பது மக்கள் விரோத செயல்.
மக்களின் வருமானம் கடந்த ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளது. அவர்கள் வருமானத்தை விட செலவு அதிகமாக இருப்பதற்கு இது முக்கிய காரணம்.விலைவாசி உயர்வுக்கு ஏற்ற வண்ணம் தொழிலாளர்களின் ஊதியத்தை மறுநிர்ணயம் செய்ய வேண்டியது அரசின் கடமை. அவர்களுக்கு குறித்த நேரத்தில் சரியான ஊதியம் வழங்க இந்த அரசு தவறியுள்ளது.மத்திய அரசின் தவறான GST வரி விதிப்பும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர காரணமாக உள்ளது.
மேலும் விலைவாசி உயர்வு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது.மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ள இந்த விலை உயர்வு குறித்தும், நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் விலைவாசி உயர்வு குறித்தும் பாராளுமன்றத்தில் மற்ற அலுவல்களை மாற்றி வைத்து விவாதிக்க வேண்டுமென ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்துள்ளேன்." என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொகுதி மறுவரையறையை தென் மாநிலங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது: ரேவந்த் ரெட்டி
சனி 22, மார்ச் 2025 5:26:56 PM (IST)

காலநிலை மாற்றத்தினை உணர்ந்து செயல்பட வேண்டும்: ஆட்சியர் இரா.சுகுமார் பேச்சு
சனி 22, மார்ச் 2025 4:52:50 PM (IST)

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 466 பேருக்கு பணி நியமன ஆணை: சபாநாயகர் வழங்கினார்!
சனி 22, மார்ச் 2025 4:39:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் 17 வழித்தடங்களுக்கு புதிய பேருந்து சேவை: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்
சனி 22, மார்ச் 2025 4:33:45 PM (IST)

எக்காரணம் கொண்டும் மாநில உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்” - டி.கே.சிவகுமார் திட்டவட்டம்!
சனி 22, மார்ச் 2025 11:56:37 AM (IST)

நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் பள்ளி மாணவன் கைது!
சனி 22, மார்ச் 2025 11:35:40 AM (IST)
