» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாற்றுத்திறனாளிகள் ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 11, நவம்பர் 2024 5:03:10 PM (IST)
இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் ஓட்டும் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது.
சாலை பாதுகாப்பு சட்டத்தின்படி, அனைத்து வாகன ஓட்டுநர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்தல் அவசியமானதாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டும் மாற்றுத்திறனாளிகளின் விபரங்கள் சேகரித்து வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலமாக சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து ஒட்டுநர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே, கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெற்று ஓட்டுநர் உரிமம் வாங்காமல் உள்ள மாற்றுத்திறனாளிகள் 20.11.2024 க்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஆதார் அட்டை நகல், சமீபத்தில் எடுத்த பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம் -2, RC புத்தகம், இன்சுரன்ஸ் நகலுடன் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:29:20 PM (IST)

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்: டிச.20ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:07:19 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள்: டிச.23க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:00:22 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் கொடிநாள் வசூல்: ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 3:46:25 PM (IST)

2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பட்டொளி வீசி பறக்கும்: விஜய் பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 12:49:39 PM (IST)

பாதாள சாக்கடை திட்டப்பணியால் சாலை சேதம் : சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 12:39:20 PM (IST)










