» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காலத்தை உருவாக்கியவன் மகாகவி: வைரமுத்து புகழஞ்சலி

புதன் 11, செப்டம்பர் 2024 11:55:09 AM (IST)

காலத்தால் உருவாக்கப்பட்டவன் கவி; காலத்தை உருவாக்கியவன் மகாகவி என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

மகாகவி பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு, கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: கவிக்கும் மகாகவிக்கும் என்ன வேறுபாடு?. காலத்தால் உருவாக்கப்பட்டவன் கவி; காலத்தை உருவாக்கியவன் மகாகவி. ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இந்திய விடுதலைக்கு ஆதரவாக ஒரு ஜனநாயகக் காலத்தை, பண்டித மொழிக்கு எதிராக பாமர மொழிக்கு ஆதரவாக ஓர் இலக்கியக் காலத்தை உருவாக்கியதில் பாரதி ஒரு மகாகவி.

எரிக்கப்படுகிற வரைக்கும் வாழ்வில் அப்படி வறுமைப்பட்டவனும் எரித்து முடித்தபிறகு வாழ்வில் அப்படிப் பெருமைப்பட்டவனும் அவனைப்போல் இன்னொருவர் இல்லை. இன்று அவன் உடல் மறைந்த நாள். அவன் நீங்கா நினைவுக்கும் தூங்காப் புகழுக்கும் தமிழ் அஞ்சலி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory