» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அ.தி.மு.க. தொடர்ந்த அவதூறு வழக்கில் 13ம் தேதி ஆஜராவேன்: சபாநாயகர் அப்பாவு
செவ்வாய் 10, செப்டம்பர் 2024 5:02:18 PM (IST)

அ.தி.மு.க. வக்கீல் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக வருகிற 13-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகிறேன் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வ.உ.சி விளையாட்டு அரங்கில், இன்று (10.09.2024) முதலமைச்சர் கோப்பை 2024 மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தொடங்கி வைத்தார்.
விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத் தலைவர் விஜிலா சத்தியானந்த், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் சபாநாயகர் மு.அப்பாவு அளித்த பேட்டியில் கூறியதாவது: அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் எனக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நான் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் அது தொடர்பாக எனக்கு எந்த சம்மனும் வரவில்லை.
எனது தனி பாதுகாவலரிடம் சம்மன் சென்றதாகவும், அதை அவர் வாங்காமல் திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அதில் உண்மை இல்லை. எனினும் எனது வக்கீல்கள் கடந்த 9-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகினர். நான் உண்மையை மட்டுமே பேசுவேன். அ.தி.மு.க. வக்கீல் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக வருகிற 13-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மண்டல முதுநிலை மேலாளர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பா.சிவா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அ.கிருஷ்ணசக்கரவர்த்தி, மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், மாநகராட்சி கவுன்சிலர் பேச்சியம்மாள், முக்கிய பிரமுகர் சித்திக் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாங்குநேரி அருகே 754 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிப்பு : காவல்துறை நடவடிக்கை
ஞாயிறு 18, மே 2025 10:44:15 AM (IST)

டாஸ்மாக் ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் : அன்புமணி வலியுறுத்தல்
சனி 17, மே 2025 5:12:23 PM (IST)

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சனி 17, மே 2025 4:20:36 PM (IST)

குமரி மாவட்டத்தில் மே 24ல் மெகா வேலைவாய்ப்பு முகாம் : இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு!
சனி 17, மே 2025 4:06:54 PM (IST)

மதுபோதையில் குளத்தில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி மரணம்!
சனி 17, மே 2025 3:44:44 PM (IST)

பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கு: ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது!
சனி 17, மே 2025 12:22:27 PM (IST)
