» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீசார் விசாரணை
ஞாயிறு 23, ஜூன் 2024 8:48:14 AM (IST)
புளியங்குடியில் பள்ளிஆசிரியை வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் ஆசிரியர் தம்பதி பள்ளிக்கூடத்துக்கு வேலைக்கு புறப்பட்டு சென்றனர். மதியம் ஆசிரியை உமாதேவி அரைநாள் விடுமுறை எடுத்து கொண்டு, பள்ளியில் இருந்து வீடு திரும்பினார். மாலையில் பள்ளி முடிந்ததும் ஆசிரியர் ரவிகுமார் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் உமாதேவி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கியவாறு கிடந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவிகுமார் கதறி அழுதார். இதுகுறித்து புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த ஆசிரியை உமாதேவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
ஆசிரியை உமாதேவி பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்தாரா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புளியங்குடியில் ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
திங்கள் 19, மே 2025 5:36:50 PM (IST)

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5பேர் கைது 1.100 கிலோ கஞ்சா பறிமுதல்!
திங்கள் 19, மே 2025 5:11:25 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: அமைச்சர் ஆய்வு!
திங்கள் 19, மே 2025 4:03:34 PM (IST)

திருநெல்வேலியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
திங்கள் 19, மே 2025 3:24:44 PM (IST)

கர்ப்பிணி தாய்மார்களுக்கான கவனிப்பு பிரிவுகள் : அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
திங்கள் 19, மே 2025 12:54:24 PM (IST)

குளியலறையில் ரகசிய கேமரா: இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டிய ராணுவ கைது!
திங்கள் 19, மே 2025 12:43:02 PM (IST)
