» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் ஒரு புதிய செவிலியர் கல்லூரி உதயம்!
வெள்ளி 14, ஜூன் 2024 4:32:09 PM (IST)

குமரி மாவட்டத்தில் மேலும் ஒரு புதிய செவிலியர் கல்லூரிக்கான அரசு அங்கீகாரத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கிராமத்தில் கே.எம்.எம்.சி மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் இயங்க இருக்கும் கே.எம்.எம்.சி நர்சிங் கல்லூரிக்கான அரசு அங்கீகாரத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டி.எம்.ஐ பவுண்டேஷன் நிர்வாகிகளிடம் வழங்கினார். இந்நர்சிங் கல்லூரிக்கு இந்த கல்வியாண்டு முதல் 100 மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதி வழங்கும்போது தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உடனிருந்தார். டி.எம்.ஐ பவுண்டேஷன் நிர்வாகிகள் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் ஆகியோருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் நன்றியை தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எல்லோருக்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் அரசு செயல்படுகிறது: அமைச்சர் மனோ தங்கராஜ்
செவ்வாய் 8, ஜூலை 2025 4:56:47 PM (IST)

கடலூர் ரயில் விபத்துக்கு மாவட்ட ஆட்சியரே காரணமா? தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு
செவ்வாய் 8, ஜூலை 2025 4:46:14 PM (IST)

வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை: தலைமைச் செயலாளர் எச்சரிக்கை
செவ்வாய் 8, ஜூலை 2025 4:11:52 PM (IST)

போதைப் பொருள் வழக்கில் நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த்துக்கு நிபந்தனை ஜாமீன்!
செவ்வாய் 8, ஜூலை 2025 3:50:54 PM (IST)

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு!
செவ்வாய் 8, ஜூலை 2025 12:43:26 PM (IST)

நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம்: தமிழ்நாட்டில் பஸ்-ஆட்டோக்கள் ஓடாது...?
செவ்வாய் 8, ஜூலை 2025 12:26:11 PM (IST)

Aswin rajJun 15, 2024 - 08:46:18 PM | Posted IP 162.1*****