» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் ஜமாபந்தி: ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது!
வெள்ளி 14, ஜூன் 2024 3:48:26 PM (IST)

அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி முகாமில் 107 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி முன்னிலையில் இன்று (14.06.2024) நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர் ஆகிய ஆறு வட்டங்களுக்கு 1433-ம் பசலிக்கான கிராம கணக்குகளை சரிபார்க்கும் வருவாய் தீர்வாய கணக்கு சரிபார்த்தல் நிகழ்ச்சியானது இந்த வருடம் ஜூன் மாதம் 11 முதல் 14-ம் தேதி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி குறுவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி கிராமம், லீபுரம் கிராமம், அகஸ்தீஸ்வரம் கிராமம், கோவளம் கிராமம், அழகப்பபுரம் கிராமம், அஞ்சுகிராமம் கிராமம், கொட்டாரம் கிழக்கு கிராமம், கொட்டாரம் மேற்கு கிராமம், வடக்கு தாமரைகுளம் கிராமம், தெற்கு தாமரைகுளம் கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில் இன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 107 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மேலும், கிராமங்களுக்குரிய வருவாய் கணக்குகள் மாவட்ட ஆட்சியரால் தணிக்கை செய்யப்பட்டது.
ஜமாபந்தியின் போது பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடி நடவடிக்கையாக 6 பயனாளிகளுக்கு பட்டா உட்பிரிவும், 2 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் மற்றும் 1 பயனாளிக்கு நலிந்தோர் குடும்ப நலத்திட்ட உதவி ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண வருவாய் அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், தனி வட்டாட்சியர் (ச.பா.தி) செந்தில்வேல்முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெங்கின் பிரபாகர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் விஜய மீனா, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ஜி.பி.அனில்குமார், உசூர் மேலாளர் (நிதியியல்) ஜூலியன் பீவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் ரூ.7,375 கோடியில் தொழில் முதலீடு : 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:48:05 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்திற்கு 20% வாக்குகள் உள்ளது: பிரசாந்த் கிஷோர் தகவல்!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:27:46 PM (IST)

திருக்குறள் பரத நாட்டிய போட்டியில் மாநில அளவில் முதலிடம்: மாணவிகளுக்கு ஆட்சியர் வாழ்த்து
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 3:46:38 PM (IST)

மாத்தூர் தொட்டிபாலத்தில் காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு சேதம்: காங்கிரஸ் கண்டனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 3:39:06 PM (IST)

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் புற்றுநோய் தின கருத்தரங்கம்!!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 3:13:34 PM (IST)

விலைவாசி உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 11:32:09 AM (IST)
