» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அண்ணா நினைவு தினம்: அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 12:38:51 PM (IST)

தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 54-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
திராவிட கழக தலைவர் வீரமணி, அமைச்சர்கள் கீதாஜீவன், முத்துசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், ராமச்சந்திரன், ரகுபதி, நேரு, வேலு, செந்தில் பாலாஜி, எம்.பி. வக்கீல் வில்சன், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன், கோவில்பட்டி நகர் மன்ற தலைவரும், திமுக நகர செயலாளருமான கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், நவநீதகண்ணன், தூத்துக்குடி மாநகர திமுக துணை செயலாளரும், கவுன்சிலருமான கனகராஜ், உள்பட பலர் கலந்து அண்ணா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாந்தான் கருத்து தெரு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர் படுகொலை: பெண்ணின் உறவினர்கள் வெறிச்செயல்!
செவ்வாய் 21, மார்ச் 2023 5:11:51 PM (IST)

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை..!!
செவ்வாய் 21, மார்ச் 2023 5:04:47 PM (IST)

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 பவுன் நகைகள் திருட்டு: பணிப்பெண் சிக்கினார்
செவ்வாய் 21, மார்ச் 2023 5:02:15 PM (IST)

வேளாண்மையை ஊக்குவிக்கும் பட்ஜெட்: வைகோ வரவேற்பு
செவ்வாய் 21, மார்ச் 2023 4:47:45 PM (IST)

ஆஸ்கர் வென்ற இயக்குநருக்கு ரூ.1 கோடி ஊக்கத் தொகை : முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:20:38 PM (IST)

கவர்ச்சிகரமான அறிவிப்புகள், மக்களை ஏமாற்றிய நிதிநிலை அறிக்கை – சீமான் கருத்து
செவ்வாய் 21, மார்ச் 2023 2:49:16 PM (IST)
