» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசுப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

வியாழன் 2, பிப்ரவரி 2023 12:31:07 PM (IST)


வேலூரில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சிற்றுண்டி சாப்பிட்டு உணவின் தரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

‘கள ஆய்வில் முதலமைச்சர்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வேலூர் மாவட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று காலையில் சத்துவாச்சாரி பாரதி நகரில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையத்திற்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, காந்தி நகர் பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்க செய்யப்பட்ட சிற்றுண்டியைச் சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்தார். இதையடுத்து, அலமேலுமங்காபுரம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், சிற்றுண்டியை சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory