» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் 4 வாரங்களில் இறுதி அறிக்கை: ஐகோர்ட்டில் சிபிசிஐடி பதில்!

புதன் 1, பிப்ரவரி 2023 4:31:10 PM (IST)

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை முடிந்துவிட்டதாகவும், 4 வாரங்களில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் சிபிசிஐடி உயர்நீதிமன்றத்தில் பதில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் கள்ளக்குறிச்சில் இருக்க கூடிய கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணமடைந்த, நிலையில் அதனை தொடர்ந்து நடைபெற்ற வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையை முறையாக நடத்த கோரி அந்த மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கின் விசாரணை என்பது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறை பலமுறை சம்மன் அனுப்பி கேட்டும் வழங்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. அதற்க்கு நீதிபதி உடனடியாக செல் போனை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், இல்லையென்றால் பெற்றோர்களிடம் விசாரணை நடத்த உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்தார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மாணவின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர் சுப்பு, மாணவி பயன்படுத்திய செல் போன் ஜனவரி 20-ம் தேதி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறினார். மேலும் ஜிம்மர் மருத்துவக்குழு நடத்திய பிரேத பரிசோதனை அறிக்கை தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் வழங்கறிஞர் கூறினார்.

இதனை அடுத்து விசாரணையின் தற்போதைய நிலைகுறித்து நீதிபதி கேள்வியெழுப்பியபோது, விசாரணையின் நிலை குறித்த அறிக்கை சீலிடப்பட்ட உரையில் அரசு தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ் தாக்கல் செய்தார். மேலும் மாணவி பயன்படுத்திய செல் போன் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தடயவியல் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், மற்ற விசாரணை நிறைவடைந்து விட்டதாகவும், தெரிவித்தார். தடயவியல் அறிக்கை கிடைத்தவுடன் ஒருமாதத்தில் விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார். மேலும் ஜிம்மர் மருத்துவக்குழுவின் பிரேதபரிசோதனை அறிக்கையை வழங்கக்கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகும்படி மனுதாரர் ராமலிங்கத்திற்கு நீதிபதி உத்தரவிட்டர். மேலும் இந்த வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory