» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குண்டாறு அணையில் தவறி விழுந்த முதியவர் சாவு

ஞாயிறு 29, ஜனவரி 2023 9:26:00 AM (IST)

குண்டாறு அணையில் தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணையில் நேற்று  முதியவர் பிணம் கிடந்தது. இதுகுறித்து செங்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இறந்நவர் செங்கோட்டை மேலூர் பெரியசாமி தெருவைச் சேர்ந்த பூதத்தான் (85) என்பதும், அந்த வழியாக சென்றபோது, அணையில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரியவந்தது. இது குறித்து செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory