» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தென்காசியில் குடியரசுதின விழா: தேசிய கொடியேற்றிய ஆட்சியர் ஆகாஷ்
வியாழன் 26, ஜனவரி 2023 10:03:53 AM (IST)

தென்காசியில் குடியரசுதின விழாவில் ஆட்சியர் ஆகாஷ் தேசிய கொடியேற்றி நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் தென்காசி ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது.மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 49 பேர்களுக்கு பதக்கங்களையும் 20 பேர்களுக்கு நற்சான்றிதழ்களை யும் ஆட்சியர் வழங்கினார்.
தீயணைப்பு மீட்பு பணிகள் துறையில் 5 பேர், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் 7பேர், மாஙட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2பேர், கருவூலம் கணக்குத் துறையில் 5பேர், பட்டு வளர்ச்சித் துறையில் 5பேர் உள்பட அனைத்து அரசு துறைகளைச் சேர்ந்த 257 பேர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார்.
விழாவில் 21 பயனாளிகளுக்கு ரூபாய் 2 லட்சத்து 14 ஆயிரத்து 410 மதிப்பீட்டீல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது . விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், தியாகி லட்சுமி காந்தன் பாரதி, ஆய்க்குடி அமர்சேவா சங்கம் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர் படுகொலை: பெண்ணின் உறவினர்கள் வெறிச்செயல்!
செவ்வாய் 21, மார்ச் 2023 5:11:51 PM (IST)

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை..!!
செவ்வாய் 21, மார்ச் 2023 5:04:47 PM (IST)

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 பவுன் நகைகள் திருட்டு: பணிப்பெண் சிக்கினார்
செவ்வாய் 21, மார்ச் 2023 5:02:15 PM (IST)

வேளாண்மையை ஊக்குவிக்கும் பட்ஜெட்: வைகோ வரவேற்பு
செவ்வாய் 21, மார்ச் 2023 4:47:45 PM (IST)

ஆஸ்கர் வென்ற இயக்குநருக்கு ரூ.1 கோடி ஊக்கத் தொகை : முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:20:38 PM (IST)

கவர்ச்சிகரமான அறிவிப்புகள், மக்களை ஏமாற்றிய நிதிநிலை அறிக்கை – சீமான் கருத்து
செவ்வாய் 21, மார்ச் 2023 2:49:16 PM (IST)
