» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு: உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். முறையீடு!
வியாழன் 29, செப்டம்பர் 2022 12:02:22 PM (IST)
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், அந்த அமைப்பு மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் 50 இடங்களில் வருகிற அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் பேரணி நடத்த அனுமதி வழங்கியது. ஆனால் தமிழக காவல்துறை பேரணியை நடத்துவதற்கு அனுமதி மறுத்துள்ளது.
தமிழகத்தில் நிகழும் சட்டம் ஒழுங்கும் பிரச்சனை காரணமாக மத அடிப்படையிலாக நடைபெறக்கூடிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகிறது. இந்த சூழலில் ஆர்.எஸ். எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கினால், அது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும். என்பதற்காக காவல் துறை பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளது.
இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. ஒருவேளை காவல் துறை அனுமதி மறுத்துள்ள காரணம் வலுவாக இருக்கும் பட்சத்தில், பேரணிக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.