» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் குளத்தில் குதித்து பிளஸ் 2 மாணவி தற்கொலை!

திங்கள் 15, ஆகஸ்ட் 2022 11:28:53 AM (IST)

அச்சன்புதூர் அருகே அடிக்கடி செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் குளத்தில் குதித்து 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். 

தென்காசி மாவட்டம்  அச்சன்புதூர் அருகே உள்ள பண்பொழி பிட்டு தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவருடைய மகள் கற்பகவல்லி (17). இவர் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் கற்பகவல்லி படிப்பில் சரிவர கவனம் செலுத்தாமல் தொடர்ந்து செல்போனில் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் கண்டித்துள்ளார். 

இதனால் கற்பகவல்லி தனது தாயிடம் தகராறு செய்து கோபித்துக் கொண்டு அருகில் உள்ள பெரிய குளத்துக்கு சென்று தண்ணீரில் குதித்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் அச்சன்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். கற்பகவல்லியின் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory