» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
புதன் 29, ஜூன் 2022 5:50:58 PM (IST)
குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
உதவி ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 66 பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வு ஜனவரி 3ஆம் தேதி நடத்தப்பட்டது. இதன் முதல்நிலை தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.
தேர்ச்சிபெற்றவர்களுக்கு மெயின் தேர்வு ஒன்றும், நேர்முகத் தேர்வும் அடுத்து நடைபெறவுள்ளது.
மெயின் தேர்வு வருகிற மே மாதம் 28 - 30 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது தேர்ச்சிபெற்றவர்கள் அனைவரும் வருகிற 15, 16ஆம் தேதிகளுக்குள் அடுத்தகட்ட ஆவணங்களை இணையத்தில் அப்லோட் செய்யவேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறது.