» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பஸ், வேன்கள், கார் என 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 8 பேர் காயம்
புதன் 19, ஜனவரி 2022 9:38:58 PM (IST)
நெல்லையில் பஸ், வேன்கள், கார் என 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 7 பெண்கள் மற்றும் ஒரு சிறுவர் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.
பாளை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த மேல முன்னீர்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் வேல் ராஜ். இவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மறுகால் தலையில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு செல்வதற்காக இரண்டு வேன்களில் ஏறிக் கொண்டிருந்தனர். 2 வேன்களும் சாலையோரம் நிறுத்தப்பட்டு அதில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஏறிக் கொண்டிருந்தனர்.
அப்போது அம்பையில் இருந்து நெல்லை நோக்கி வந்த தனியார் பஸ், திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ஒரு வேனின் பின் பகுதியில் மோதியது. இதில் 2 வேன்கள் ஒன்றோடு ஒன்று மோதி, எதிரே வந்த கார் மீது மோதி யது. அடுத்தடுத்து 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது.இதில் வேனில் ஏறி அமர்ந்திருந்த 7 பெண்கள் மற்றும் ஒரு சிறுவர் உள்பட 8 பேர் காயமடைந்தனர். அவர்களை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர் கொலை : தலையை தேடும் பணி தீவிரம்!
திங்கள் 16, மே 2022 12:11:08 PM (IST)

கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் தேர்வு: அமைச்சர் பொன்முடி பரபரப்பு பேச்சு
திங்கள் 16, மே 2022 12:01:49 PM (IST)

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திருப்பி கொடுத்தால் ரூ.10 வழங்கும் திட்டம் தொடங்கியது!
திங்கள் 16, மே 2022 11:50:31 AM (IST)

வாடிகனில் மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் : போப் பிரான்சிஸ் வழங்கினார்
திங்கள் 16, மே 2022 11:21:09 AM (IST)

மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்லத் தடையில்லை என அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்: சீமான்
திங்கள் 16, மே 2022 10:29:30 AM (IST)

கல் குவாரியில் ராட்சத பாறை விழுந்து ஒருவர் பலி: இருவர் மீட்பு! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
திங்கள் 16, மே 2022 10:20:56 AM (IST)
