» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் 299பேருக்கு கரோனா: 5 போலீசாருக்கு தொற்றால் ஆயுதப்படை கேன்டீன் மூடல்
புதன் 19, ஜனவரி 2022 9:30:13 PM (IST)
நெல்லையில் இன்று ஒரே நாளில் 299பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. 5போலீசாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் போலீஸ் கேன்டீன் மூடப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று தொடர் ந்து உயர்ந்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக ஒரே நாளில் 707 பேருக்கு தொற்று உறுதியானது. இந்நிலையில் இன்று மாவட்டம் முழுவதும் புதிதாக 692 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மாநகர் பகுதியில் 299 பேரும், வள்ளியூரில் 114 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இன்று பாதிக்கப்பட்டவர்களில் 5 அரசு டாக்டர்கள், கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியர் கள் 5 பேர், கங்கை கொண்டான் சிப்காட் ஊழியர்கள் சிலரும் அடங்குவர். பாளை ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கு என கேன்டீன் செயல்பட்டு வருகிறது. அதன் அருகே போலீசார் மற்றும் ஓய்வு பெற்ற போலீசார் சலுகை விலையில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பல்பொருள் அங்காடியும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் போலீஸ் கேன்டீனில் பணியாற்றும் 5 போலீசாருக்கு தொற்று இன்று உறுதியானது. இதனால் கேன்டீனை 5 நாட்கள் மூட உத்தரவிடப்பட்டது. உடனடியாக கேன்டீன் மூடப்பட்டு அந்த வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல் தொற்று கண்டறியப்பட்ட அனைவரது தெருக்களிலும், கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரபணிகள் தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது.
மாநகர பகுதியில் தொற்று உயர்ந்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.⭕⭕இன்று முகக்கவசம் அணியாமல் சென்றவர்களை போலீசார் ஆங்காங்கே மறித்து ரூ.500 அபாரதம் வசூலித்தனர். மேலும் சமூக இடைவெளி இன்றியும், அதிக அளவு பொதுமக்கள் திரண்ட கடையின் உரிமையாளரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து மாநகர் பகுதிகளில் போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும், சோதனைகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர் கொலை : தலையை தேடும் பணி தீவிரம்!
திங்கள் 16, மே 2022 12:11:08 PM (IST)

கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் தேர்வு: அமைச்சர் பொன்முடி பரபரப்பு பேச்சு
திங்கள் 16, மே 2022 12:01:49 PM (IST)

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திருப்பி கொடுத்தால் ரூ.10 வழங்கும் திட்டம் தொடங்கியது!
திங்கள் 16, மே 2022 11:50:31 AM (IST)

வாடிகனில் மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் : போப் பிரான்சிஸ் வழங்கினார்
திங்கள் 16, மே 2022 11:21:09 AM (IST)

மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்லத் தடையில்லை என அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்: சீமான்
திங்கள் 16, மே 2022 10:29:30 AM (IST)

கல் குவாரியில் ராட்சத பாறை விழுந்து ஒருவர் பலி: இருவர் மீட்பு! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
திங்கள் 16, மே 2022 10:20:56 AM (IST)
